வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள்

Valkai Thathuvangal In Tamil

இந்த பதிவில் “வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள்” காணலாம்.

வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள்

Valkai Thathuvangal In Tamil

வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள்

பேராசை கொண்டவன் எதிலும் திருப்தி அடைய மாட்டான். திருப்தியே மேலான செல்வம்.
ஐம்புலன்களுக்கு அடிமையாவது நல்லதல்ல. அவற்றை ஆட்சி செய்யும் நிலைக்கு மனிதன் உயர வேண்டும்.
எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்.
பிறரிடம் கையேந்துபவனை விட பிறருக்கு உதவ மனமில்லாமல் இல்லை என்று மறுப்பவனே இழிந்தவன்.
உடல் தூய்மையை விட மனத்தூய்மையே அவசியமானது. இதயத்தை நல்ல எண்ணத்தால் நிரப்பு.
பிறரின் இன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள். மற்றவர் துன்பத்தில் பங்கேற்று உதவி செய்.
பொருள் இல்லாதவன் ஏழையல்ல. எப்போதும் மனதில் ஆசையைச் சுமந்து திரிபவனே ஏழை.
அறிவு என்னும் கதவு திறந்தால் மட்டுமே அறியாமை என்னும் திரை அகலும்.
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல நல்லவனும் ஒரு தீய குணத்தால் ஒழுக்கமற்றவனாக ஆகி விடுவான்.
பிறருடைய குற்றம் காண்பதிலும் பிறரைக் குறை சொல்வதிலும் நேரத்தை செலவிடாதீர்கள்.
மேடு பள்ளம் நிறைந்தது தான் உலகம். அதுபோல இன்ப துன்பம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.
மனிதனின் உடன்பிறந்த இயல்பு ஆசை. அதை படிப்படியாக திருத்திக் கொண்டால் மட்டுமே வாழ்வில் உயர முடியும்.
யாரையும் வெறுப்பது கூடாது. அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். தனித்து வாழாதீர்கள். மனம் விட்டு பிறரிடம் பழகுங்கள்.
எல்லாருக்கும் மதிப்பளிப்பதோடு, அவர்களின் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பதே சிறந்த நாகரிகம்.
நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள். நல்லறிவு தரும் நுால்களைப் படியுங்கள்.
நாக்கைக் கட்டுப்படுத்தினால் உள்ளத்தையும், உடலையும் எளிதாக வசப்படுத்த முடியும்.
பெற்ற தாயைப் போற்றுங்கள். அவளின் தியாகமே உங்களை ஆளாக்கியது என்பதை மறவாதீர்கள்.
கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம் இருந்து விட்டால் நம் வாழ்வே சொர்க்கமாக மாறி விடும்.
நடந்ததையே எண்ணி வருந்தாதீர்கள். நிகழ்காலத்தைப் பயனுடையதாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
நல்லது கெட்டதை பகுத்தறியும் விவேகத்தைக் கற்றுக் கொடுப்பதே உண்மையான கல்வியாகும்.
செய்யப் போவதையே சொல்லுங்கள். சொன்னதையே செயல்படுத்துங்கள்.
மனிதன் கடமையில் பொறுப்புடன் இருந்தால், அதற்குரிய நற்பலன் கிடைத்தே தீரும்.
பூமிக்கு வரும் போது நாம் எதையும் கொண்டு வரவும் இல்லை. போகும் போது எதையும் கொண்டு போகவும் முடியாது.

Valkai Thathuvangal In Tamil

பிறருக்கு துன்பம் ஏற்படாத வகையில் உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய சிறப்பான செயல்பாடுகளே, எதிர்கால வாழ்க்கைக்கு ஆணி வேராக இருக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கையே உறுதியான வாழ்க்கை.
நன்றி உள்ளவனே நல்லவன். தன்னை உணர்ந்தவன். ஒருவர் செய்த நன்றியை மறப்பது பாவத்திலும் பாவம்.
உன் பலவீனம் தான் உன்னை அசுரத்தன்மை உள்ளவனாகவும், கோபக்காரனாகவும் மாற்றுகிறது. அதை அறிந்து துரத்தி விடு.
நல்லவர் நட்பை விட சிறந்த துணை வேறில்லை. நேர்மையாக நடப்பதைக் காட்டிலும் சிறந்த வழிபாடு இல்லை.
விதிப்படி இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நடப்பதைக் கண்டு கலங்காதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கருது.
நாளை பார்த்துக் கொள்ளலாம் என நற்செயலை ஒத்தி போடாதே. உடனே அக்கறையுடன் அதில் ஈடுபடு.
பெற்றோரை காட்டிலும் சிறந்த தெய்வம் இல்லை. நேர்மையைக் காட்டிலும் சிறந்த வழிபாடு இல்லை.
இன்பம் துன்பத்திலும், துன்பம் இன்பத்திலும் முடிவடையும். இந்த முரண்பாட்டை யாரும் தவிர்க்க முடியாது.
புத்தக அறிவு மட்டும் பயன் தராது. எதையும் அனுபவம் மூலமாகவே சோதித்து உணர்வதே சிறந்தது.

You May Also Like:

வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள்

புதிய தமிழ் பொன்மொழிகள்