கீழாநெல்லி பயன்கள்

keelanelli benefits in tamil

நம்மைக் காக்கும் விடயங்கள் பலவும் நம்மைச் சுற்றி இருக்கும். ஆனால் அதில் பலவற்றை நாம் அறிந்து கொள்வதில்லை. அதில் ஒன்றே கீழாநெல்லி ஆகும்.

இதற்கு கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உள்ளன. இது குறிஞ்செடி வகையைச் சார்ந்தது. இந்தச் செடி முழுவதும் மருத்துவ பயன்பாட்டை கொண்டதாகும்.

கீழா நெல்லி வெப்ப மண்டல பகுதிகளில் வளரும். இது ஒரு அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாகக் காய்கள் காய்ப்பதால் கீழ் காய் நெல்லி என அழைக்கப்பட்டது. பின்னர் பேச்சு வழக்கில் கீழாநெல்லி என அழைக்கப்படுகின்றது. சித்தர்கள் அருளிய ஒரு காயகற்ப மூலிகை இதுவாகும்.

கீழாநெல்லி பயன்கள்

சர்க்கரை நோயை குணப்படுத்தும்

உலர்ந்த கீழாநெல்லி பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்னர் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

சிறுநீரகம் மற்றும் கல்லீரலைப் பாதுகாக்கும்

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகளைத் தடுத்து டயாலிசிஸ் செய்வதிலிருந்து காக்கும். கீழாநெல்லி இலையை உலர்த்தி காய வைத்து பொடி செய்து வைத்து அதனை சாப்பிடுவதற்கு முன்னர் மூன்று வேளைகளும் எடுத்து வரலாம்.

வழுக்கை மறையும்

சிலருக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழும். அப்படியானவர்கள் வழுக்கை தலையில் முடி வளர கீழாநெல்லி வேரைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தடவி வந்தால் வழுக்கை மறைந்து, முடிகள் வளரும்.

மஞ்சள் காமாலை நோயைக் குணமாக்கும்

ஒரு டம்ளர் மோருடன் கீழாநெல்லி மற்றும் எலுமிச்சை பழச் சாற்றைச் சேர்த்து அரைத்துக் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சொறி, சிரங்கு குணமாகும்

சொறி, சிரங்கு குணமடையும். கீழாநெல்லி இலையை உப்புடன் சேர்த்து அரைத்து அதனை தேய்த்து குளித்து வந்தால் சொரி சிரங்கு குணமடையும். கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி சிரங்குக்கு தேய்த்து வந்தால் குணமடையும்.

வெள்ளைபடுதல் குணமாகும்

மாதவிடாய் பிரச்சனை தீரும். அதிக குருதிப் போக்கு சரியாகும். கீழாநெல்லி வேர் அசோகப்பட்டை மற்றும், அத்திப்பட்டை ஆகியவற்றைப் பொடியாக்கி இரண்டு கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வரலாம். அவ்வாறு செய்யும்போது மாதவிடாய் பிரச்சனை தீரும்.

ஆடு, மாடு தீவனம்

கீழாநெல்லி இலையை ஆடு மாடு சாப்பிட்டு வர பால் அதிகமாக சுரக்கும்.

முடிப் பிரச்சினை நீங்கும்

ஓரிதழ் தாமரை மற்றும், கீழாநெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து ஒரு நெல்லிக்காய் அளவு ஒரு மண்டலம் சாப்பிட்டு வர நரை நீங்கி இளமையான தோற்றம் வரும்.

கண் பார்வை கூர்மை அடையும்

பொன்னாங்கண்ணி இலைச் சாரு மற்றும், கீழாநெல்லியை சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர கண்பார்வை கோளாறு சரியாகும்.

அத்துடன் கீழாநெல்லி இலை மெய்கிரட்டை இலை மற்றும், பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து, சிறிதளவு எடுத்து மோரில் கலந்து 45 நாட்கள் குடிக்க மாலைக்கண் பார்வை மங்கள் சரியாகும்.

Read More: துரித உணவு தீமைகள்

முகம் வெள்ளையாக இயற்கை வழிகள்