Vidukathaigal: சிறுவர் விடுகதைகள் (Siruvar Vidukathaigal In Tamil) : விடுகதைகள் என்பது விடையை மறைத்து வைத்துக்கொண்டு சிந்தனையை தூண்டுவதை நோக்கமாக கொண்டு கேட்கப்படும்.
நமது குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சிந்திக்கும் ஆற்றலை தூண்டுவதன் மூலம் அவர்களின் அறிவு கூர்மையை வளர்க்க முடியும்.
Table of Contents
Vidukathaigal: சிறுவர் விடுகதைகள்
1. டாக்டர் வந்தார் ஊசி போட்டார் காசு வாங்காமல் போனார் அவர் யார்?
விடை: நுளம்பு
2. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?
விடை: பூசணிக்கொடி
3. மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன பூக்கள் அது என்ன?
விடை: நட்சத்திரம்
4. முகம் பார்த்து வளரும் முடிவில்லாமல் தொடரும் அது என்ன?
விடை: சொந்தம்
5. திரி இல்லாத விளக்கு உலகம் எல்லாம் தெரியும் விளக்கு அது என்ன?
விடை: சூரியன்
6. கடலில் கலக்காத நீர்.. யாராலும் குடிக்கவும் முடியாத நீர் அது என்ன நீர்?
விடை: கண்ணீர்
7. தொடாமல் அழுவான் தொட்டால் பேசுவான் அவன் யார்?
விடை: தொலைபேசி
8. பெட்டியை திறந்தால் பூட்ட முடியாது அது என்ன?
விடை: தேங்காய்
9. படபடக்கும் பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
விடை: பட்டாசு
10. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன?
விடை: பாய்
11. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?
விடை: சிலந்தி வலை
12. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான் அவன் யார்?
விடை: அலாரம்
13. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?
விடை: தராசு
14. பூவோடு பிறந்து நாவோடு கலந்து விருந்தாவன் மருந்தாவன் அவன் யார்?
விடை: தேன்
15. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணி இல்லை அது என்ன?
விடை: சிலந்தி
16. உடம்பெல்லாம் சிவப்பு அதன் குடுமி பச்சை அது என்ன?
விடை: தக்காளி
17. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும் தான் யார்?
விடை: நுங்கு
18. செய்தி வரும் பின்னே.. மணியோசை வரும் முன்னே அது என்ன?
விடை: தொலைபேசி
19. பார்க்கத்தான் கருப்பு.. ஆனால் உள்ளமோ சிவப்பு நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன?
விடை: தேயிலை
20. பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள் அது என்ன?
விடை: சீப்பு
Siruvar Vidukathaigal In Tamil
21. கடலிலே கலந்து கரையிலே பிரிந்து தெருவிலே திரியும் பூ எது?
விடை: உப்பு
22. காதை திருகினால் பாடுவான் அவன் யார்?
விடை: ரேடியோ
23. நாள் முழுவதும் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கு உடல் மேல் கவசம் அது என்ன?
விடை: நத்தை
24. நீளவால் குதிரையின் வால் ஓடஓட குறையும் அது என்ன?
விடை: தையல் ஊசியும் நூலும்
25. இவன் ஒரு பேப்பர் தான் ஆனால் மதிப்போடு இருப்பான் அது என்ன?
விடை: பணம்
26. கசக்கி பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான் அவன் யார்?
விடை: கரும்பு
27. ஓயாமல் இரையும் இயந்திரம் இல்லை.. உருண்டோடி வரும் பந்தும் இல்லை அது என்ன?
விடை: கடல்
28. மரத்தின் மேலே தொங்கும் மலை பாம்பு இல்லை அது என்ன?
விடை: விழுது
29. உணவை எடுப்பான் ஆனால் உணவை உண்ணமாட்டான் அவன் யார்?
விடை: அகப்பை
30. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி அவள் யார்?
விடை: முட்டை
31. ஆலமரம் தூங்க.. அவனியெல்லாம் தூங்க.. பெருங்கடல் தூங்க.. ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
விடை: மூச்சு
32. ஓர் அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன?
விடை: பற்கள்
33. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது.. நான் யார்?
விடை: நாய்
34. காலையில் வந்த விருந்தாளியை இரவில் காணவில்லை அது யார்?
விடை: சூரியன்
35. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?
விடை: வெண்டிக்காய்
36. பிடுங்கலாம் ஆனால் நடமுடியாது அது என்ன?
விடை: தலைமுடி
37. எங்க அக்கா சிவப்பு குளித்தால் கருப்பு அது என்ன?
விடை: அடுப்புக்கரி
38. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?
விடை: சிரிப்பு
39. இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?
விடை: பட்டாசு
40. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
விடை: நிழல்
You May Also Like: