எழுத்து என்றால் என்ன

ezhuthu enral enna in tamil

யாப்பிலக்கணத்தில் செய்யுள் அல்லது பாக்களுக்கு அடிப்படையாக அமையும் உறுப்பாக எழுத்து காணப்படுகிறது. எழுத்துக்கள் மொழிகளுக்கு முதன் காரணமாக அமைகின்றன.

தமிழ்மொழி என்பது செம்மொழியாகவும், பண்டைக்காலம் தொட்டே சிறந்த இலக்கண இலக்கியங்கள் பெற்ற மொழியாகவும் உள்ளது.

அவ்வாறான தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக சில மாறுதல்களை பெற்று இன்றைய எழுத்து மொழியாக உருவம் பெற்றுள்ளது.

எழுத்து என்றால் என்ன

ஒலிகளுக்கான வரிவடிவமே எழுத்து என அழைக்கப்படுகிறது. இவையே மொழியின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படை காரணமாக அமைகிறது.

அதாவது எழுத்து என்பது ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி மொழியை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும்.

மாத்திரை என்றால் என்ன

எழுத்துக்களை உச்சரிப்பதற்கு எடுக்கும் கால அளவு மாத்திரை என அழைக்கப்படும்.

மாத்திரை என்றால் என்ன

குறில் எழுத்துக்கள்

குறுகி ஒலிக்கும் ஓசை அமைப்பு உடைய எழுத்துக்கள் குறில் எழுத்துக்கள் எனப்படும். இவை குற்றெழுத்து எனவும் அழைக்கப்படுகின்றன. குறில் எழுத்துக்களை உச்சரிப்பதற்கு ஒரு மாத்திரை அளவு எடுக்கிறது.,

குறில் எழுத்துக்கள் எடுத்துக்காட்டு: அ, இ, உ, எ, ஒ

நெடில் எழுத்துக்கள்

நீண்டு ஒலிக்கும் ஓசை அமைப்புடைய எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள் எனப்படும். இவை நெட்டெழுத்து எனவும் அழைக்கப்படுகின்றன. நெடில் எழுத்துக்களை உச்சரிப்பதற்கு இரண்டு மாத்திரை அளவு எடுக்கிறது.

நெடில் எழுத்துக்கள் எடுத்துக்காட்டு: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஔ

எழுத்தின் வகைகள்

எழுத்துக்களை முதல் எழுத்து என்றும் சார்பு எழுத்து என்றும் இருவகையாகப் பிரிக்கலாம்

  1. முதல் எழுத்து
  2. சார்பு எழுத்து

முதல் எழுத்துக்கள்

12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் இணைந்து முதல் எழுத்துக்கள் உருவாகின்றன. சொற்களை உருவாக்குவதற்கு இவையே, அடிப்படையாக அமைகின்றன. அதனால் தான் இவற்றை முதல் எழுத்துக்கள் என்று அழைக்கின்றனர்.

உயிர் எழுத்துக்கள்

தமிழில் அடிப்படை ஒலிகளான அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கின்றனர்.

மெய்யெழுத்துக்கள்

உயிர் எழுத்துக்களைப் போலவே மொழிக்கு அடிப்படையாக உள்ள மற்றுமொரு வகை எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் ஆகும்.  க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய 18 எழுத்துக்களுமே மெய் எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.

வல்லினம்

மெய் எழுத்துக்களில் வன்மையாக ஒலிக்கும் எழுத்துக்களை வல்லினம் என்று கூறுவர். க், ச், ட், ல், ப், ற் என்கின்ற ஆறு மெய் எழுத்துக்களும் வன்மையாக ஒலிப்பதனால் வல்லின எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றது.

மெல்லினம்

மெய் எழுத்துக்களில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துக்களை மெல்லினம் என்று கூறுவர். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு மெய் எழுத்துக்களும் மென்மையாக ஒலிப்பதனால் மெல்லின எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.

இடையினம்

மெய் எழுத்துக்களில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துக்களை இடையினம் என்று அழைக்கின்றனர். ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறு மெய் எழுத்துக்களும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதனால் இடையின எழுத்துக்கள் என அழைக்கப்படுகிறது.

சார்பெழுத்து

உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும், உயிர் மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தமக்கு உரிய மாத்திரையை விட குறுகி அல்லது நீண்டொலித்தல் சார்பெழுத்துக்கள் எனப்படும்.

தமிழ் மொழியில் உயிரெழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என்பன மட்டுமல்லாமல் வேறு சில வகை எழுத்துக்களும் உள்ளன.

  1. உயிர்மெய் எழுத்து
  2. ஆய்த எழுத்து
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக் குறுக்கம்
  8. ஔகாரக் குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

உயிர் மெய் எழுத்துக்கள்

ஒரு மெய் எழுத்துடன் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கும் எழுத்து உயிர் மெய் எழுத்து எனப்படும். அதாவது 18 மெய் எழுத்துக்களும் 12 உயிர் எழுத்துகளும் சேர்ந்து பிறக்கும் எழுத்து உயிர் மெய் எழுத்துக்கள் ஆகும்.

உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18 ஒன்று சேர்ந்து  (12*18) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.

உதாரணம்:

‘க்’ என்கின்ற மெய் எழுத்துடன் ‘அ’ என்கின்ற உயிர்களுக்கு சேர்வதனால் ‘க’ என்ற உயிர் மெய் எழுத்து உருவாகிறது.

  • க்+ஆ = கா
  • க்+இ = கி
  • க் + ஈ = கீ

ஆய்த எழுத்து

‘ஃ’ என்ற மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆயுத எழுத்து ஆகும். இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர் மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

பழந்தமிழில் பரவலாக ஆயுத எழுத்து பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் ஆயுத எழுத்தின் பயன்பாடு அரிதாகவே காணப்படுகிறது. ஆயுத எழுத்தை உச்சரிப்பதற்கு அரை மாத்திரை அளவை எடுக்கின்றது.

உயிரளபெடை

உயிர் எழுத்துக்களில் நெட்டெழுத்துக்கள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரை அளவில் இருந்து நீண்டு ஒலிப்பது உயிரளபெடை ஆகும்.

உதாரணம்:

  • ஓஓதல்
  • கெடுப்பதூஉம்
  • படாஅ

ஒற்றளபெடை

உயிர் எழுத்துக்கள் அளவெடுப்பது போலவே மெய் எழுத்துக்களும் அளவெடுக்கின்றன. அதாவது மெய் எழுத்து அளவெடுக்கும் போது அதற்கு அடையாளமாக, அவை மெய்யெழுத்துக்கள் இரண்டு தடவை எழுதப்படும் இவை ஒற்றளபெடை என அழைக்கப்படும்.

உதாரணம்:

  • வணங்ங்கினான்
  • மன்ன்னன்

குற்றியலுகரம்

உகரம் ஒரு மாத்திரை அளவை உடையது. இந்த ஒரு மாத்திரை அளவு குறைந்து அதாவது குறுகி ஒலிக்கின்ற இடங்களும் காணப்படுகின்றன. அவ்வாறு அவை குறுகி ஒலிக்கின்ற உகரம் குற்றியலுகரம் என அழைக்கப்படும்.

உதாரணம்:

  • அஃது
  • பாகு
  • வரகு
  • பாக்கு

குற்றியலிகரம்

இகரம் சில இடங்களில் குறுகி ஒலிக்கின்றன. அவ்வாறு அவை குறுகி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் என அழைக்கப்படும்.

உதாரணம்:

  • கேண்மியாசென்மியா
  • நாடு(ட்+உ) + யாது = நாடியாது (ட்+இ)
  • கொக்கு (க்+உ) + யாது = கொக்கியாது (க்+இ)

ஐகாரக் குறுக்கம்

ஐ எனும் நெடில் எழுத்தானது தனது இரண்டு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிப்பது ஐகாரக் குறுக்கம் எனப்படும்.

உதாரணம்:

  • ஐப்பசி
  • வைகல்
  • கடைசி
  • மழை

ஔகாரக் குறுக்கம்

ஔ என்னும் நெடில் எழுத்து தனது  இரண்டு மாத்திரை அளவில் இருந்து குறுகிய ஒலிப்பது ஔகாரக் குறுக்கம் என அழைக்கப்படும்.

உதாரணம்:

  • ஔவையார்
  • மௌவல்
  • வௌவால்

மகரக் குறுக்கம்

மகரக்குறுக்கம் என்பது மகர ஒற்று, குறைந்து ஒலிப்பதை குறிக்கும்.

உதாரணம்:

  • மருண்ம்
  • உண்ம்
  • தரும் வளவன்
  • வஃகான் மிசையும் மக்குறுகும்

ஆயுத குறுக்கம்

இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் இறுதியில் ல், ள் ஆகிய மெய் எழுத்துக்கள் வந்து இரண்டாம் சொல்லின் முதலில் தகர எழுத்து வந்தால் ல், ள் ஆகியவை ஆயுத எழுத்தாக மாறிவிடும். இதையே ஆய்தக்குறுக்கம் என்கின்றனர்.

உதாரணம்:

  • அல் + திணை = அஃறிண
  • முள் +தீது = முஃடீது

Read more: இன எழுத்துக்கள் என்றால் என்ன

வேற்றுமை உருபு என்றால் என்ன