நம் முன்னோர்கள் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறை உள்ளவர்களாக இருந்ததன் காரணத்தினால் தான் தமது உணவுகளில் அதிகம் சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவற்றை எடுத்துக்கொண்டனர்.
அவ்வாறு அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி ஆகும். காய்கறிகள், பழங்களைக் காட்டிலும் பல மடங்கு நன்மைகளை தருவது இந்த கீரை மற்றும் மூலிகை வகைகள் தான்.
அந்தவகையில் அம்மான் பச்சரிசி மூலிகை செடியானது பல நற்பயன்களைக் கொண்டுள்ளது. இது சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடியதாகும்.
பூண்டு வகை குடும்பத்தை சார்ந்த இவை பார்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இதில் இரண்டு வகைகள் உள்ளன. பெரிய அம்மான் பச்சரிசி தாவரம் மற்றும் சிறிய பச்சரிசி தாவரம்.
அம்மான் பச்சரிசி பயன்கள்
வாய் மற்றும் குடல் அல்சரைப் போக்கும். இதற்கு பாசி பருப்புடன் இந்த இலையை சேர்த்து நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் குடல் அல்சர் குணமாகும்.
நாக்கு புண், வாய்ப்புண் போன்றவற்றினைக் குணப்படுத்த உதவுகிறது.
உடல் சூட்டைத் தணிக்கும். அம்மான் பச்சரிசி இலைகளை பூண்டு மற்றும் வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்கி சட்னி தயாரித்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடம்பு குளிர்ச்சி ஏற்பட்டு உடல் சூடு தணியும்.
வீக்கம் மற்றும் கொப்புளங்களைக் குணமாக்கும். அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து வீக்கம் மற்றும் கொப்பளங்கள் உள்ள இடங்களில் பற்று போட்டு வந்தால் 5 நாட்களில் குணமாகி விடும்.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். இதற்கு சுத்தமான மாட்டுப் பாலுடன் இதன் பூவை நன்றாக கழுவி அரைத்து கொஞ்சமாகப் பாலுடன் இதை சேர்த்து காலையில் 18 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
ஆண், பெண் பாலினப் பிரச்சினையை சரி செய்யும். பெண்கள் கருவுறுதலை எளிதாக்கும். அம்மான் இலைகளைப் பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்பட்டுவதுடன் எளிதில் கருவுறுவதற்கும் உதவும். ஆண் இனப்பெருக்க மண்டலம் மேம்பட்டு ஆண்மை பிரச்சினைகள் சரியாக அம்மான் பச்சரிசி இலைகளை சம அளவு எடுத்து அரைத்து பாலில் கலந்து 21 நாட்களுக்கு காலையில் குடித்து வரவேண்டும்.
வெள்ளைப்படுதல் பிரச்சினையைச் சீர் செய்கின்றது. அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சினை சரியாகும்.
வாத நோய்களைக் குணமாக்கும். எலுமிச்சைப்பழ அளவில் இந்த இலைகளை எடுத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தளும்பு, மரு போன்ற அடையாளங்களை மறையச் செய்யும். இதன் இலையை அரைத்து அதன் மேல் பூசிவர, தளும்பு மருவை உதிரச் செய்யும்.
இரத்ததைச் சுத்தப்படுத்துவதுடன் நல்ல இரத்தைச் சீராகப் பேணும். 3 வேப்பிலைகள், மிளகு, அம்மான் பச்சரிசி இலைகள் சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
உடல் வலு பெறும். அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை இரண்டையும் சம அளவில் எடுத்து துவையல் போல் அரைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
You May Also Like : |
---|
நெருஞ்சி முள் பயன்கள் |
நோயின்றி வாழ பின்பற்ற வேண்டியவை |