விடுகதைகள் வினா விடைகள்

Vidukathai or Puthir In Tamil With Answer

இந்த பதிவு உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் “விடுகதைகள் வினா விடைகள்” தொகுப்பை உள்ளடக்கியுள்ளது.

விடுகதைகள் வினா விடைகள்

1. காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அது என்ன?

விடை: முள்

2. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோசம் அது என்ன?

விடை: வானம்

3. கையுண்டு கழுத்துண்டு தலையுண்டு உயிரில்லை அது என்ன?

விடை: சட்டை

4. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?

விடை: கிளி

5. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் அது என்ன?

விடை: கப்பல்கள்

6. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?

விடை: ஒட்டகம்

7. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?

விடை: பப்பாளி விதைகள்

8. நடக்கத் தெரியாதவன் நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?

விடை: கைகாட்டி

9. நடலாம் பிடுங்க முடியாது அது என்ன?

விடை: பச்சை குத்துதல்

10. நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?

விடை: வெங்காயம்

11. நடைக்கு உவமை நளனக்கு தூதுவன் அவன் யார்?

விடை: அன்னம்

12. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை அது என்ன?

விடை: தீக்குச்சி

13. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும் அது என்ன?

விடை: தபால் தலை

14. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?

விடை: கடல் அலை

15. காற்று வீசும் அழகான மரம் அது என்ன? 

விடை: சாமரம்

16. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான் அது என்ன?

விடை: வெங்காயம்

17. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள் அவள் யார்?

விடை: செல்பேசி

18. இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?

விடை: பட்டாசு

19. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?

விடை: தராசு

20. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள் அது என்ன? 

விடை: வெண்டைக்காய் 

21. உடல் சிவப்பு வாய் அகலம் உணவு காகிதம் நான் யார்?

விடை: அஞ்சல் பெட்டி

22. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

விடை: வாழைப்பூ

23. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?

விடை: பேனா

24. தாடிக்காரன் மீசைக்காரன் கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?

விடை: தேங்காய்

25. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?

விடை: காய்ந்த மிளகாய்

Vidukathai or Puthir In Tamil With Answer

26. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?

விடை: விரல்கள்

27. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?

விடை: கிளி

28. இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?

விடை: கடிகாரம் 

29. இரவல் கிடைக்காதது இரவில் கிடைப்பது அது என்ன?

விடை: தூக்கம் 

30. உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?

விடை: எதிரொலி 

31. உள்ளே இருந்தால் ஓடித்திரியும் வெளியே வந்தால் விரைவில் மடியும் அது என்ன?

விடை: மீன் 

32. அச்சு இல்லாத சக்கரம்  அழகு காட்டும் சக்கரம் அது என்ன?

விடை: வளையல்

33. என் குதிரை கறுப்புக் குதிரை குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை அது என்ன?

விடை: உளுந்து 

34. ஏழை படுக்கும் பஞ்சணையை எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை அது என்ன?

விடை: பூமி 

35. ஒரு நெல் குத்தி வீடெல்லாம் உமியாயிற்று அது என்ன?

விடை: தீபம் 

36. மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து மண்ணோடு மண்ணாவான் அவன் யார்?

விடை: மண்புழு

37. கதிர் அடிக்காத களம் உயிர் பறிக்கும் களம் அது என்ன?

விடை: போர்க்களம் 

38. உயரத்திலிருந்து விழுவான் அடியே படாது தரைக்குத்தான் சேதாரமாகும் அது என்ன?

விடை: அருவி நீர் 

39. பச்சைக் கீரை சமைக்க உதவாது வழுக்க உதவும் அது என்ன?

விடை: பாசி 

40. பேப்பர் கிடையாது வாய்ப்பாடு தெரியாது கணக்கிலோ புலி அது என்ன?

விடை: கால்குலேட்டர் 

41. நாக்கு இல்லாவிட்டால் இவனுக்கு வேலையில்லை அவன் யார்?

விடை: மணி 

42. அண்டாவில் இருக்கும் தண்ணி அள்ளினாலும் குறையாது அது என்ன?

விடை: கிணற்று நீர் 

43. வாலுள்ளவன் ஆனால் பறப்பான் அவன் யார்?

விடை: காற்றாடி

44. கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான் தண்ணீரில் தவறிவிடுவான் அது என்ன? 

விடை: செருப்பு 

45. வெளிச்சத்திலே பிடிப்பதை இருட்டிலே பார்க்கிறோம் அது என்ன? 

விடை: திரைப்படம் 

46. பருத்த வயிற்றுக்காரி படுத்தேக் கிடப்பால் அவள் யார்?

விடை: தலையணை 

47. வயிறு இருக்கும் சாப்பிடாது காது உண்டு கேட்காது அது என்ன? 

விடை: துணிப்பை

48. அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை அது என்ன? 

விடை: தலைவகிடு 

49. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ அது என்ன? 

விடை: வாழைப்பூ 

50. முதுகை தொட்டால் மூச்சு விடுவான் பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான் அவன் யார்?

விடை: ஆர்மோனியம் 

You May Also Like

விடுகதைகள் தமிழில் வேண்டும்