நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்

நெடுந்தொகை

நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்அகநானூறு

அகம் பற்றிய பாடல் தொகுப்பில் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகின்றது. அகவற் பாக்களால் ஆனது ஆகையால் நெடுந்தொகை அகவல் எனவும் அழைக்கப்படுகின்றது.

அகநானூறு

சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்பு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகும். இவையே பதினெண் மேற்கணக்கு நூல்கள் ஆகும்.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என எட்டுத் தொகுதிகளாக தொகுக்கப்பட்ட நூல்கள் எட்டுத்தொகை நூல்கள் ஆகும்.

இன்றைய இந்த பதிவில் நாம் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூறு குறித்து விளக்கமாக பார்ப்போம்.

அகநானூறில் உள்ளடங்குபவை

எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாக இடம்பெறுவது அகநானூறு ஆகும். அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கை ஆற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தி இடம்பெறுவது,

பழங்காலத் தமிழர்களின் திருமண விழா நடைமுறைகளை நமக்கு விளக்குவது, கிராம நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குடவோலை தேர்தல் முறை குறித்து கூறுவது இந்த அகநானூறு ஆகும்.

அகநானூறின் தோற்றம்

சங்க இலக்கியங்களில் பர வரலாற்றுச் செய்திகளை அதிகமாகக் கூறுகின்ற இந்த நூல் ஏறத்தாழ நூற்று நாற்பத்தைந்து புலவர்களால் பாடப்பட்டது.

இந்த அகநானூறில் பதின்மூன்று அடிச் சிற்றெல்லையும் 31 அடிப் பேரெல்லையும் கொண்டு அகப்பொருள் குறித்து ஆசிரியப் பாவால் பாடப்பட்ட நானூறு பாடல் கொண்ட தொகுப்பு ( கடவுள் வாழ்த்துடன் 401 பாடல்கள்).

இந்த நூல் மூன்று பகுப்புக்களைக் கொண்டுள்ளது.களிற்றியானை நிரை ( 1- 120) 120 பாடல்கள், மணிமிடைப் பவளம் (121-300) 180 பாடல்கள், நித்திலக் கோவை (301-400) 100 பாடல்கள் போன்றனவே பகுப்புக்கள் ஆகும்.

திணை வைப்பு முறை

1,3,5,7,9 என முடியும் 200 பாடல்கள்- பாலைத்திணை,

4 என முடியும் 40 பாடல்கள் – முல்லைத்திணை,

6 என முடியும் 40 பாடல்கள் – மருதத்திணை,

0 என முடியும் 40 பாடல்கள் – நெய்தல் திணை,

2,8 என முடியும் 80 பாடல்கள் – குறிஞ்சித் திணை

நூலுடன் தொடர்புடைய ஆசிரியர்கள்

அகநானூறைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடிக்கிழார் மகன் உருத்திரசன்மன்.  இந்த நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.

இங்கு இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். கடவுள் வாழ்த்துப் பாடலில் குறிப்பிடப்படும் கடவுள் சிவபெருமான்.

இந்த நூலுக்கு முதலில் உரை எழுதியவர்கள் நாவலர் நா.மு வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு கிரா. வேங்கடாசலம் பிள்ளை ஆகிய இருவரும் இணைந்து பாடினர். இந்த நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் வே. இராசகோபால் ஐயங்கார் கவிஞர் பொன்.இராஜன் பாபு

அகநானூறு வேறு பெயர்கள்

  • அகம்
  • அகப்பாட்டு
  • நெடுந்தொகை
  • நெடுந்தொகை நானூறு
  • நெடும்பாட்டு
  • பெருந்தொகை நானூறு
  • நெடுந்தொகை அகவல்

Read more: மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்

தமிழின் முதல் கள ஆய்வு நூல்