மருதாணி இலையின் பயன்கள்

maruthani ilai payangal in tamil

மருதாணி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருதாணி தாவரத்திற்கு மருதோன்றி, ஜனா இலை, ஐவனம், பவனம் போன்ற பல பெயர்கள் உண்டு.

இந்தியாவிலும் இது ஒரு மூலிகையாக, அழகு சாதனப்பொருளாக பலலாயிரக்கணக்கான ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறு செடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணங்கள் கொண்டவை.

மருதாணி இலையின் பயன்கள்

1. இளநரை மாறும் – மருதாணி இலையின் மைய நன்றாக அரைத்து அடை போல் தட்டையாகத் தட்டி நிழலில் காய வைத்து கொள்ள வேண்டும். இதை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாட்கள் வெயிலில் காய வைத்து பின்னர் நான்றாக வடிகட்டி ஒரு போத்தலில் பத்திரப்படுத்த வேண்டும். இப்படி தயாரித்த எண்ணெயைத் தலையில் பூசி வந்தால் இளநரை நீங்கும்.

2. கண்களுக்கு நல்ல குளிர்ச்சியை தரும் மற்றும் நல்ல தூக்கத்தை தரும் – இரவு தூங்கும் போது மருதாணி பேஸ்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் நல்ல தூக்கத்தையும் தரும்.

3. தலைவலியைக் குணமாக்கும் – மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்டை நெத்தியில் தடவினால் கடுமையான தலைவலியாக இருந்தாலும் குறைந்து விடும்.

4. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நீங்கும் – இதற்கு 6 தேக்கரண்டி மருதாணி இலையில் இருந்து பிழிந்த சாற்றை காலை வேளையில் வெறும் வயிற்றில் 10 நாள்கள் வரை தொடர்ந்து பருக வந்தாலஒ; நல்ல பலன் கிடைக்கும்.

5. நகம் சொத்தை நீக்கி நகம் பளபளப்பாக்க உதவுகின்றது – மருதாணி இலைகளுடன் கொஞ்சம் பாக்கு கலந்து அதை அம்மியில் வைத்து அரைத்து இரவில் கை, கால், நகங்களில் வைத்து நன்றாக காய்ந்த பின்னர் காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6. கொப்புளங்கள், தீக்காயங்கள் போன்றவற்றைக் குணமாக்கச் சிறந்த மருந்தாகச் செயல்படும் – அழுத்தமான தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்கும். குளிர்ச்சித் தன்மை கொண்ட மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர குணமாகும்.

7. குஷ்ட நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுத்தபடுகின்றன.

8. மஞ்சள் காமாலைப் பிரச்சனையைக் குணப்படுத்தும்.

9. காசநோயை குணப்படுத்த மருதாணி பெரிதும் உதவுகிறது – காசநோய்க்கு எதிராக மருதாணி இலைகள், பவுடர் மற்றும் பேஸ்ட் செயல்படும்.

10. வயிற்று ஒவ்வாமைப் பிரச்சினையைச் சீர்செய்யும் – ஒவ்வாமை ஏஙற்பட்டால் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி போன்றன ஏற்படும். மருதாணி இலையை அரைத்து சாற்றைப் பிழிந்து அருந்தி வந்தால் இப்பிரச்சினைகள் தீரும்.

11. தோலின் சருக்கங்களைப் போக்கி இளமைத் தோற்றத்தை உண்டாக்கும் – தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு போன்றவற்றையும் குணப்படுத்தும். மருதாணி இலையை அரைத்து இதிலிருந்து பெறப்படும் எண்ணெயை உடலில் பூசிவர வேண்டும்.

12. கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் – மருதாணி இலையை நன்கு கழுவிச் சுத்தம் செய்து தூய நீரில் சிலமணி நேரம் ஊறவைத்து பின் அதனைப் பருகி வந்தால் கல்லீரல் பித்தப்பை போன்றவற்றிலுள்ள நச்சுக்கள் வெளியேறிச் சுத்தப்படும்.

You May Also Like :
கற்பூரவள்ளி இலையின் பயன்கள்
நொச்சி இலை பயன்கள்