பெருங்காயம் நன்மைகள்

perungayam benefits tamil

பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது ஈரான் நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இந்த செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடன் அதன் தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைப்பார்கள். அதுதான் பெருங்காயம் எனப்படுகிறது. பெருங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

பெருங்காயம் நன்மைகள்

செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கிறது. வாய்வு போன்ற செரிமான சிக்கல்களைத் தணிக்க இது உதவுகிறது. பெருங்காயமானது, ஆன்டி ஸ்பாஸ்மோடிக் மற்றும் ஆன்டி இன்பிளாமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. வீக்கம் மற்றும் வாய்வு போன்ற செரிமான சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறது.

தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

நரம்பு பிரச்சனைகளை தீர்க்கும். சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.

ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, வறட்டு இருமல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மற்றும் மார்பு நெரிசலைக் குறைக்கிறது. மேலும், கபத்தை விடுவிக்கவும் இந்த பெருங்காயம் பெரிதும் உதவுகிறது.

பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல், சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை வெளியேற்றுகிறது. மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் இருமல் ஆகியவற்றை போக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தினை குறைத்து இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. இரத்த உறைவதை இயற்கையாகவே தடுக்கும் திறன் கொண்டது. மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்க இது உதவுகிறது. இதில் கூமரின் என்ற ஓர் கலவை உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இதன் மூலம் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கிறது.

மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் பெற உதவுகிறது. ஒரு கப் மோரில், ஒரு சிட்டிகை பெருங்காயம், வெந்தயம் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, அதை மாதவிடாய் காலத்தில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. சிறிது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அதனை சூடாக்கி எடுத்து அந்த கரைசலை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்துவர வேண்டும். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும்.

எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும்.

பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களைப் பாதுகாக்கும்.

Read more: முடக்கத்தான் கீரை பயன்கள்