பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா கவிதைகள்

amma birthday wishes kavithai in tamil

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா கவிதைகள்

இந்த உலகிற்கு
என்னை அடையாளம் காட்டிய என் தேவதை
இந்த உலகில் உதித்த சிறந்த நாள்
என் தாயின் பிறந்த நாள்
உங்களை வாழ்த்த என் வயது போதாது
வணங்குகிறேன் அம்மா..!!


என் உயிரைத் தந்த பெண் உயிரே
என் உயிரை வளர்க்க உன் உயிரை கரைத்தவள் நீ
என் பசியை போக்க உன் பசியை மறந்தவள் நீ
எனது மகிழ்ச்சிக்காக உனது கவலைகளை மறைத்தவள் நீ
எனது தனிமை நோய்க்கு ஆறுதல் மருந்தும் நீ
எனக்கு உயிர் கொடுக்க உன் உயிரை சிதைத்தவள் நீ
என் ஒருவன் உறக்கத்திற்காக உன் உறக்கம் கொன்றவள் நீ
என் அறிவை வளர்க்க உன் வியர்வையை கொட்டியவள் நீ
என் சோகம் குறைய உன் சோகம் துறந்தவள் நீ
என் உடல் நலனை வேண்டி உன் உயிர் நலனை இழந்தவள் நீ
வார்த்தைகள் போதவில்லை அம்மா உன் தியாகம் கூறுவதற்கு
உன்னை வாழ்த்தும் வயதில்லை வணங்கினாலும் மிகை இல்லை
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா..!!


நான் அழுத போது என்னை சிரிக்க வைத்த முகம்
என்றுமே என்னை வெறுக்காத குணம்
தவறுகளை மன்னிக்கும் மனம்
அளவுகளே இல்லாத பாசம்
மற்றவர்கள் காட்டிடாத நேசம்
அனைத்தையும் உன்னிடம் கண்டேன் அம்மா
அழுவதற்கு கண்கள்
அடிப்பதற்கு கைகள்
சாய்ந்து கொள்ள தாயின் மடி போதும்
தோட்டத்தில் அழகு பூக்கள்
என் வெற்றிக்கு அழகு என் அம்மா
எனக்கு உயிர் தந்த உன் உயிர்
இவ் உலகத்தில் மலர்ந்த இந்நாளை
போற்றுகிறேன்..!!


கடவுள் தந்த உயிர் என்று சொல்லவா
உன்னை கடவுளிலும் உயர் என்று சொல்லவா
நிகரில்லா என் சுவாசம் நீயே
என் மனம் தினம் ஏங்கும் அன்பும் நீயே அம்மா
உருவம் அறியா கருவிலும் என்னை காதல் செய்தவளே
உன்னை பற்றி எழுதாமல்
நான் எழுதும் எழுத்துக்கள் தான் கவிதைகளாகுமா
பிறக்கும்போதே உன் வழியை உணர்ந்தேதான்
அழுது நான் பிறந்தேனோ
பாலூட்டி சேராட்டி பசிமறந்து என்னை காத்தாயே அம்மா
வாடகை வீட்டில் வசந்தத்தை கண்டேனே
நீ பாடும் தாலாட்டின் அரவணைப்பால்
வேகமும் விவேகமும் கற்று தந்தாயே
உன்னாலே நடந்தேனே நான் இன்று பயின்றேனே தாய் தமிழை நன்று
என் பிள்ளை அழகு என்று ஊரெல்லாம் நீ சொல்ல
கருப்புள்ளி ஒன்றும் மழலையில் என் கன்னத்தில் நீ வைத்தாயே
கர்வத்தில் சிரித்தேனே நானே என்னை அழுகென்று எண்ணி
சாலையில் கதிரவன் கதிர் உச்சமடைந்ததும்
சூடு நான் காணவில்லையே
உன் சேலையில் முந்தானையில்
என் மேனியை நீ காத்தாயே!
கடவுளே இதிலே தோன்றி வரம் என்று கேட்டாலும்
சற்று சுயநலமாய் கேட்பேனே நான்
இவ்வுலகில் நான் வாழும் நாட்களை தாண்டியும்
நலமாய் நீ வாழ வேண்டும் என்று
உன் பிறந்தநாள் பரிசாக..!!!


எத்தனை உறவுகள் இத்திசையில் தேடி வந்தாலும்
ஏன் ஆயிரம் ஆயிரம் அன்பினை பொழிந்தாலும்
தாயன்பிற்கு தான் அது ஈடாகாது
தோல்விக்கனும் என்னை துரத்தும் போது
என் மனம் தேடுவது
உன் மடியில் சாந்து இளைப்பாறும்
இடம் அதையே
என்றும் நீ மட்டுமே என் கண் மொழிகளில்
என் நிலை அறிவாய்
என் குரல் ஒலிகளில்
என் வலி அறிவாய்
நான் வாழும் நாள் முழுவதும் இந்த ஆறுதல் வேண்டும்
உன் வாழ்நாள் நீடிக்க வேண்டும்
வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!


நான் முகம் பார்த்த முதல் நாளே
உன்னை முழுவதும் மறந்திடுவாய்
நான் முழு மனிதனாக
தூங்காமல் விழித்திருப்பாய்
என்னை சுமந்த நாட்களிலே
எத்தனையோ சுமை இருக்கும்
அத்தனையும் நீ கடந்து
அக்கறையாய் பெற்று எடுத்தாய்
அருகினிலே தினம் இருந்து
கொஞ்சம் மொழி பேசும் அம்மா
நான் முகம் சுழித்தாலும்
சிரித்தாலும் அன்பையே தருகின்றாய்
இப்படி நலமுடனே நாள்தோறும் அரவணைத்தாய்
அம்மா இவ்வுலகில் நான் வாழ உன் உறவு மட்டும் போதும்
இப் பிறந்த நாளை போல் மகிழ்ச்சியாக
உன் வாழ்நாள் நீடிக்கட்டும்.!!


    பசி ருசி மறந்து என்னை பார்த்துக் கொண்ட அம்மா
    உன் தேகம் வதங்கும் வரையிலும்
    என்னை பெட்டகமாய் நீ பாதுகாத்தாய்
    ஒத்த உசுருக்குள்ள எத்தனையோ ஆசைகளை நீ சுமந்த
    எத்தனையோ உனக்காக அல்ல எனக்காக தானே அம்மா
    இரவு பகல் பாராமல் ஒளி விளக்காய் நீ எரிந்தாய்
    உன் நிழலும் என்னை மிதிக்காமல்
    கண்வலித்து பார்த்துக் கொண்டாய்
    உன் தியாகங்களுக்கு நான் தரும் பரிசாக
    உலகின் மகிழ்ச்சிகள் அனைத்தையும் திருப்பி அளிக்கிறேன்
    இந்த பிறந்த நாளில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


    இந்த உலகில் போனால் திரும்ப
    மீண்டும் வராத பொக்கிஷம்
    நம் அம்மா தான்
    எத்தனை முறை நீ மனதை காயப்படுத்தினாலும்
    அது எல்லாம் அடுத்த நிமிடம் மறந்து விட்டு
    மீண்டும் உன்னிடம் பேசத் துடிக்கும் ஓர் இதயம்
    தான் அம்மா
    அடுத்த நொடி அம்மா என
    கூப்பிட்டு பார்
    உடனே உன்னிடம் வந்து நிற்கும்
    ஒப்பற்ற தெய்வம் அம்மா
    அம்மா என்று சொன்னால் அதன் உருவம் அன்பு தான்
    அதனை விட அதிகமான அன்புகள் இன்று கிடைத்து
    நீ ஆனந்தமாய் இருக்க
    வாழ்த்துகிறேன்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


    மழலையாய் நீ தோன்றிய இந்நாளில்
    வற்றாத பூ வாசமாக இதழ் சிரித்த நீ
    கண்ணாக நீ காத்து
    நீ விதைத்த செடியாக நான் முளைக்க
    மரம் என நான் வளர்த்து
    நிழல் தந்து உன்னை காக்க நினைத்த வேளையில்
    கூறி நிற்கின்றேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!


    உலகில் நீ உதித்த இந்நாளில்
    ஆயிரம் கோயில்களில் செய்த
    அர்ச்சணையின் புண்ணியமாக உன்னை எண்ணுகிறேன்
    இன்னும் நான் வாழும் காலமெல்லாம்
    உன் அன்பின் அரவணைப்பில் நனைய வேண்டும்
    என்று ஆசைப்படுகிறேன்
    உன் உள்ளம் ஆனந்தத்தினாலும்
    உன் உடல் ஆரோக்கியத்தினாலும்
    என்றென்றும் நிறைந்து வழிய
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!!

    You May Also Like:

    அம்மா கவிதை வரிகள்