அம்மா கவிதை வரிகள்

Amma Kavithai In Tamil

இந்த பதிவில் “அம்மா கவிதை வரிகள்” பதிவை காணலாம்.

இந்த உலகத்தில் நமக்கு எல்லாமே அம்மா தான். அம்மா என்று உச்சரிக்காமல் எந்தவொரு உயிராலும் வாழ்ந்திட முடியாது.

அம்மா என்பவள் அதிசயம், அம்மா என்பவள் அற்புதம், அம்மா என்பவள் புனிதம்.

உறவுகளில் முதன்மையான உறவு முகம் தெரியாத போதே நம்மை நேசிக்கும் முதல் உறவு அம்மா.

  • அம்மா பற்றிய கவிதைகள்
  • Amma Kavithai In Tamil
அப்பா கவிதை வரிகள்

அம்மா கவிதை வரிகள்

இந்த உலகத்தின் உயிர்மூச்சாய்
அனைத்து உயிர்களின் சுவாசமாய்
வாழ்க்கையின் உயிரோட்டமாய்
பிரபஞ்சத்தின் ஆணிவேராய் இருப்பவள் அம்மா

மனிதர்களுள் மேன்மையானவளாய்
தெய்வங்களே வணங்கிடும் தெய்வமாய்
நடமாடும் அழகு தேவதையாய்
அன்பின் திருவுருவமாய் விளங்குபவள் அம்மா

பத்துமாதம் தன் பொன் வயிற்றில்
பத்திரமாய் எனை சுமந்து
வலிகள் பல தாங்கி
பத்திரமாய் எனை பெற்றெடுத்தவள் அம்மா

அந்தி பகல் கண் உறங்காது
அவளது உதிரத்தையே பாலாக்கி
தன் வாழ்வைத் துறந்து
எமக்காய் வாழ்பவள் அம்மா

பசி தூக்கம் இழந்து
உற்றார் உறவினரை மறந்து
அவள் நலம் பாராது
தன் குழந்தைகளுக்காய் வாழ்கின்ற தேவதை

தான் அறிவிலியாய் இருந்தாலும்
தன் பிள்ளை உயர்ந்தவனாய் விளங்க
சிறந்தவற்றை எல்லாம் அவனிற்கு அளித்திட
கடினமாய் உழைக்கும் உழைப்பாளி

உலகமே ஒன்றாகி தடையாக நின்றபோதும்
உயிராக தன் குழந்தைகளை காப்பவள்
காவல் தெய்வங்கள் பல உள்ள போதும்
தாய் போல் நமை காப்பவர் யாருமில்லை

தாயில் சிறந்த கோவிலுமில்லை
நம் மனமெனும் கோவிலில் அமர்ந்து
எப்பொழுதும் துணையாக உதவி
தரணியிலே நடமாடும் தெய்வம் நம் தாய்

ஏழைத்தாய் போல் உலகில் யாரும்
சொந்தங்கள் இருப்பதில்லை
வலி மிகுந்த வரிகளை – அன்றே
பாடி வைத்தான் கவிஞன்

பட்டப் பகலில் நட்டநடு வெயிலில்
கால் கடுக்க கடினப்பட்டு
கல்லுடைத்து கதிர்வெட்டி
கஞ்சி குடித்து தன் வயிற்றை நிரப்பிடுவாள்

அல்லும் பகலும் அயராது உழைத்து
தான் பெற்றபிள்ளை ஞானத்தில் சிறப்புற்று
தன் பெயர் கூறக்கேட்டு
வலி மறந்து சிரித்திடுவாள்

உருவம் அறியாமல் நாம் கருவில் இருந்தபோதே
நமக்கு தெரியாமல் நமை காதல் செய்தவள்
நாம் எத்தனை தவறு செய்தாலும்
நமை அரவணைக்கும் ஒரே ஒரு ஜீவன் அம்மா

தன் பிள்ளையை எத்தாயும் வெறுத்ததில்லை
வெறுப்பையும் அன்பாய் காட்டத் தெரிந்தவள்
ஒடி நொடி எமைப் பிரிந்தாலும்
உயிரைப் பிரிந்தாதுபோல் துடிப்பவள் அம்மா

வேகமும் விவேகமும் தந்து
எந்நாளும் நிகரில்லா சுவாசமாய் நிற்பவள்
ஈரேழுலகமும் போற்றி வணங்கிட
ஈரெட்டாய் நிறைந்தவள் அன்னை

அம்மா என்ற ஒற்றைச் சொல்லே
பெரும் பலம் தந்திடும்
அனைத்து வலிகளையும் களைந்து விடும்
அத்தனை அன்பு வாய்ந்தவள் அம்மா

அவள் இன்றி ஓரணுவும் அசையாது
மனிதன் முதல் விலங்கு வரை
அத்தனையிலும் அவளதிகாரம்
அகிலம் போற்றும் தேவதை அம்மா

பெற்றவர்கள் பெருமை சொல்லிட
பிள்ளைகள் தான் மறந்தாலும் – தாய்
தன் பிள்ளை பெருமை பாட
என்றும் மறந்ததில்லை

முதியோர் இல்லத்தில் இருந்தாலும்
தன் பிள்ளை நலமாய் வாழ வேண்டிடுவாள்
ஆயிரம் கவி பாடினாலும் அன்னை புகழ்பாட
வார்த்தைகள் இருப்பதில்லை

உடலிற்கு உயிர் கொடுத்து
உலகத்தில் வாழ வழி செய்த அன்னையை
உயிர் உள்ளவரை உளம் போற்றி
உத்தமராய் வாழ்ந்திடுவோம்

You May Also Like:

ஊக்கமூட்டும் மேற்கோள்கள்