கண் கருவளையம் மறைய டிப்ஸ்

eye black circle solution in tamil

ஆண் மற்றும் பெண் என இருபாலரின் பிரச்சனையாக உள்ள கண் கருவளையம் மறைய டிப்ஸ் சிலவற்றை பார்க்கலாம்.

இந்த கருவளையங்கள் பல்வேறு காரணிகளால் வருகின்றது அதில்

  • தூக்கம் இன்மை
  • சுற்று சூழல் மாசு
  • மன அழுத்தம்
  • புகைப்பிடித்தல்
  • ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள்

போன்றவை குறிப்பிட தக்கவை. கண் கருவளையங்களை இலகுவாக மறைய வைக்க முடியும்.

கண் கருவளையம் மறைய டிப்ஸ்

சரியான தூக்கம்

அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வில்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது.

உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களில் ஏற்படும் கருவளையம் நமக்கு உணர்த்துகின்றது. தூக்கம் ஒன்றே நமது உடலுக்கும் கண்களுக்கும் சரியான ஓய்வாகும்.

இரவு நேரங்களில் அதிகம் கணினி மற்றும் கைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் நேரடியாக கண்களை தாக்குகின்றது.

சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நேரத்தை கழிப்பதால் தான் பெரும்பாலும் கருவளையம் ஏற்படுகின்றது.

தினமும் 7 தொடக்கம் 8 மணிநேரம் உறங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியான ஆரோக்கியமான தூக்கத்தை பின்பற்றும் போதே இலகுவாக கண் கருவளையத்தில் இருந்து விடுபடலாம்.

புகைபிடிக்கும் பழக்கம்

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை இன்றே கைவிடுவது சிறந்தது. இது கண் கருவளையத்திற்கு மட்டும் காரணமாக அமையாமல் பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது.

ஊட்ட சத்து

சிலருக்கு ஊட்டச்சத்து குறைபாட்டாலும் கண் கருவளையம் ஏற்படுகின்றது. உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்பது மிகவும் அவசியம்.

வெயில்

அதிக வெயில் காரணமாகவும் கண் கருவளையம் ஏற்படுகின்றது. வெயில் காலங்களில் வாரம் ஒரு முறை கண்களை குளிர்ச்சிப்படுத்தும் வெள்ளரியை துண்டாக வெட்டி கண்களின் மேல் வைப்பது சிறந்தது.

இது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதுடன் கருவளையம் ஏற்படுவதையும் முற்கூட்டியே தடுக்கிறது.

கற்றாளை

கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் சிறந்த பொருள் தான் கற்றாளை. கற்றாளை சாற்றை கண் கருவளையம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால் மிகவிரைவில் கண் கருவளையத்தில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள்

மஞ்சளுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் கலந்து கண்களை சுற்றி தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்து வந்தால் கண் கருவளையம் விரைவில் நீங்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் வைட்டமின்-சி அதிகம் நிறைந்துள்ளது. இது அனைவரும் அறிந்த ஒன்றே. இது முகத்தில் உள்ள கருமையை போக்கும் தன்மை கொண்டது.

குறிப்பாக கண் கருவளையங்களை விரைவாக நீக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றை கண்களை சுற்றி தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் காலை மாலை என இரண்டு வேளைகள் செய்து வந்தால் கண் கருவளையம் விரைவில் மறைந்து விடும்.

இவற்றை செய்யும் போது கண்களுக்குள் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால் நிறுத்தி விடுங்கள்.

மேலும் பதிவுகளை படியுங்கள்.

இயற்கையாக முடி கருமையாக