உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்

udal soodu in tamil

கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து, வறட்சி ஏற்படுவதால், பூமியின் இயற்கை குணம் மாறுபட்டு உயிரினங்கள் உடல் நலத்தை இழக்கின்றன. மனித உடல் அமைப்பின் உறுப்புகள் 70-80 சதவீதம் நீரால் ஆனது.

வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்து 20-30 சதவீத நீர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் உடல் சூடு ஏற்படுகின்றது.

உடல் சூடு பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுவதற்கு மூல காரணமாக அமைகின்றது. உடல் சூட்டால் ஏற்படும் நோய்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்

#1. வாய்ப்புண்.

உடல் அதிகமான சூட்டை உணரும்போது வாய்ப் பகுதிக்குள் கொப்பளம் ஏற்படும். இந்நேரங்களில் உடலை குளிர்விக்க வேண்டியது அவசியமாகும். அதிகளவில் நீராகாரங்களை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக கரும்புச் சாற்றை நீர் ஆகாரமாக எடுத்துக் கொள்ளலாம். கரும்புச்சாறு உடல் சூட்டைத் தணிக்க வல்லது.

#2. கண் எரிச்சல்.

உடல் சூடு அதிகமாக இருப்பின் கண் சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும். உடல் அதிகமான வெப்பத்தை உணரும்போது கண் எரிச்சல் ஏற்படும். கண்களில் நீர் வடிதல், கண்களில் கொப்பளம் ஏற்படல் போன்றனவும் உடல் சூடு அதிகமாகும்போது ஏற்படும்.

இளநீர், பதநீர், நுங்கு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இது கண் எரிச்சலைக் குறைப்பதுடன் உடல் சூட்டையும் தணிக்கும்.

#3. பித்தப்பை, கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.

உடல்சூடு அதிகரித்தால் பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இளநீர் பருகுவதன் மூலம் உடல் சூட்டை தணிக்கலாம்.

#4. வயிற்று கோளாறுகள்.

கோடைக்காலத்தில் நாம் அருந்தும் நீரினாலும், உணவினாலும் வயிற்றுக்கோளாறுகள் வரும். அப்படிப்பட்ட நேரங்களில் புதினா ஜூஸ் கைகொடுக்கும். புதினாவைத் துவையல், சட்னி எனப் பல்வேறு வடிவங்களில் சேர்த்துக் கொண்டாலும் வயிற்றுக்கோளாறுகள் சரியாகும்.

#5. மூளை மற்றும் உடல் முழுவதும் உள்ள நரம்பு செல்களை பாதிக்கும்.

அதிக உடல் சூடானது குழப்பத்திற்கு வழிவகுக்கும், நினைவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்தும்.

#6. தலைவலி.

உடல் சூடு அதிகமாகும் போது வெப்ப சோர்வு ஏற்பட்டு தலைவலியை ஏற்படுத்தும். இந்த தலைவலி மிதமானது முதல் கடுமையான எல்லை வரை கூட செல்லும். இந்நேரங்களில் வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் போன்வற்றை அதிகமாக சாப்பிடலாம்.

#7. குமட்டல்.

வெப்பச் சோர்வை அனுபவிக்கும் போது குமட்டல் பொதுவான பிரச்சினையாக உள்ளது. அதிக வாந்தி ஏற்படும் போது மருத்துவரை அணுகுவது சிறந்தது. வெள்ளரிக்காய் பித்தத்தைத் தணித்து குடலுக்கு குளிர்ச்சியூட்டும்.

#8. மலச்சிக்கல் ஏற்படும்.

உடல் வெப்பம் அடைகின்ற போது மலச்சிக்கல் ஏற்படுகின்றது. மலம் கழிப்பதில் சிரமம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் எரிச்சலும் ஏற்படலாம்.

தர்பூசணியில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. இதில் பொட்டாசியம் சத்தும் நிறைந்திருப்பதால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் நீங்கும் நார்ச்சத்து மற்றும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும்.

#9. தலை முடி உதிர்தல்.

அதிக உடல் சூடு காரணமாக தலைமுடி அதிகளவாக உதிரும். இக்காலத்தில் வாரத்தில் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து தலை குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

#10. தோல் வியாதிகள்.

அதிக உடல் சூட்டின் காரணமாக முகப்பரு ஏற்படும். குறிப்பாக, வறண்ட சருமம் உள்ளவர்கள், முகப்பருவால் அவதிப்படுபவர்கள்.

இவர்கள் எலுமிச்சைச் சாற்றைத் தடவி வருவது தீர்வு தரும். சாத்துக்குடி ஆரஞ்சு போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். இவை சரும சுருக்கங்களை நீக்கி பளபளப்பாகும்.

You May Also Like :
அக்குள் கருமை நீங்க
பற்களில் மஞ்சள் கறை நீங்க