வேப்ப எண்ணெய் பயன்கள் – Veppennai

Veppennai Payangal In Tamil

இந்த பதிவில் வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மகத்துவங்கள் நிறைந்த “வேப்ப எண்ணெய் பயன்கள்” பற்றி காணலாம்.

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பாரம்பரியமான மரம், செடி, கொடிகளை கொண்டே பல மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்திருக்கின்றனர். அவ்வகையில் வேப்ப எண்ணெயும் ஒன்றாகும்.

வேப்ப மரம் இந்திய நாட்டின் பூர்விக மரம். பழங்காலந்தொட்டே மருத்துவத்தில் வேப்ப மரத்தின் பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

வேப்ப எண்ணெய் பயன்கள் (Veppennai Payangal In Tamil)

1.தோல் சுருக்கத்தை நீக்கும். வயது அதிகரிக்கும் போது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். இத்தகைய தோல் சுருக்கத்தை வேப்ப எண்ணையில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் நீக்க உதவுகின்றன. வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

2. காயங்கள் மற்றும் தழும்புகளை நீக்கும். காயங்களில் கிருமித் தொற்று ஏற்படுவதை தடுத்து, காயங்களைச் சீக்கிரம் ஆற்றுகிறது. காயங்களால் உடலில் அழுத்தமான தழும்புகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து அந்த இடங்களில் வேப்ப எண்ணையை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3. பாத நோய்களைப் போக்கும். மழைக் காலங்களில் சேற்றில் இருக்கும் கிருமிகளின் தொற்று சிலருக்கு ஏற்படுவதால் சேற்றுபுண்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு படர் தாமரை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை சீக்கிரம் குணமாக்க தினமும் சிறிது வேப்ப எண்ணையை தடவி வந்தால் குணமாகும்.

4. வயிற்றுக் கிருமிகளை அழிக்கும். இனிப்புகளை அதிகம் சாப்பிடும் போது வயிறு மற்றும் குடல்களில் பூச்சி தொல்லைகள் ஏற்படக்கூடும். இதற்கு அரை டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணையை குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து, மலம் கழிக்கும் போது அனைத்தும் வெளியேறிவிடும்.

5. புற்று நோய் வராமல் தடுக்கும். குறிப்பாக வேப்ப எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளதால் இதனை உடலுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. வேப்பெண்ணையை சிறிதளவு குடித்து வந்தால் உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கலாம்.

6. சொரியாசிஸ் நோயைத் தடுக்கின்றது. தோலில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் மற்றும் பரம்பரை காரணத்தால் ஏற்படும் நோயாகும். இக்குறைபாட்டை குறைப்பதில் வேப்ப எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் சொரியாசிஸ் பிரச்னையை குணப்படுத்தலாம்.

7. மலேரியா, டெங்கு, யானைக்கால் வியாதி மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாவதற்கு காரணம் கொசுக்களாகும். இவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்குகின்றது. வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்த்து கொண்டு உறங்குவதால், கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.

8. தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. தலையில் பொடுகு, பேன் தொல்லைகளை நீக்க வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் நன்கு ஊறிய பின்பு குளிக்க வேண்டும். மூன்று வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வந்தால் நெடு நாட்களாக இருக்கும் பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்க பெறலாம்.

You May Also Like :
வெட்டி வேர் பயன்கள்
ஆவாரம் இலை பயன்கள்