மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

moola noi in tamil

வெளியில் சொல்ல வெட்கப்படும் பல நோய்களில் மூல நோயும் ஒன்றாகும். இது வயது வேறுபாடின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரவலாக எல்லோரையும் தாக்கக்கூடிய நோயாகும்.

மலத் துவாரத்தில் மலமானது மிகவும் கடினத் தன்மையுடன் முக்கி வெளியேறும்போது ரத்த நாளங்கள் தளர்வடைவதால் ஏற்படுவதே மூல நோயாகும்.

மூல நோயானது மூன்று வகைகளில் காணப்படுகின்றது. அதாவது உள்மூலம், வெளி மூலம், ரத்தம் மூலம் என மூன்று வகைப்படும்.

மூல நோய்க்கான காரணங்கள்

உணவு பழக்க வழக்கம் தான் முதன்மை காரணமாகும்.

  • நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்ணுதல்
  • பொரித்த உணவுகளை உண்ணுதல்
  • மதுபான பாவனை
  • அதிக மாமிசங்களை உண்பது
  • துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது
  • அதிக நேரம் ஒரே இடத்தில் இருந்து வேலை பார்ப்பது
  • மலம் கழிக்கும் போது முக்கி வெளியேற்றுவது

அறிகுறிகள்

மலம் கழிக்கும் போது தாங்க முடியாத வலி, ஆசனவாயில் கட்டி, மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறுதல், ஆசனவாய் அரிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும்.

மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

பொதுவாக குளிர்ச்சி தன்மை கொண்ட உணவுகளை உடலில் சேர்க்கும் போது மூலநோய் குணமடையும்.

பழங்கள்

பழங்களை உணவில் சேர்ப்பதன் மூலம் மூல நோயை குறைக்கலாம். ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம், அவகோடா, பப்பாசி பழம், பேரிக்காய், மாதுளை போன்றவற்றையும், சிற்றிக்கசிட் கொண்ட பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி சப்போட்டா, திராட்சை முதலான பழங்களையும் உணவில் சேர்ப்பதன் மூலமாக மூலநோய் குறையும்.

காய்கறிகள்

தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, ப்ரக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேரட், வெண்டிக்காய், புடலங்காய் கொத்தமல்லி போன்ற காய்கறிகளை உணவில் சேர்க்கலாம். இந்த உணவுகளின் மூலம் உடற் சூடு குறைந்து ஜீரணம் எளிதாகும். 400g தொடக்கம் 500g காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 50% பச்சையாகவும், 50% காலை உணவு மற்றும், மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

கீரை வகைகள்

வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் குறிப்பாக உடலுக்கு சூட்டை ஏற்படுத்தக் கூடிய கீரை வகைகளை தவிர்க்க வேண்டும்.

பருப்பு வகைகள்

அனைத்து வகையான பருப்பு வகைகளும் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ளலாம். எனினும் அளவுடன் உணவில் சேர்ப்பது நல்லது.

மோர்

மோரை உணவில் சேர்ப்பதன் மூலம் வயிறு குளிர்மையாகும். மேலும் ரத்தப்போக்கும் படிப்படியாக குறையும்.

விளக்கெண்ணெய்

உணவில் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலம் இலகுவாக கழிக்க முடியும்.

நீராவி உணவுகள்

புட்டு, இடியப்பம், இட்லி போன்ற நீராவி உணவுகளை காலை மற்றும், இரவு உணவுகளாக எடுத்துக் கொள்வது நல்லது. இவை எளிதில் ஜீரணம் அடையக் கூடியவை என்பதனால் மலம் கழிப்பதிலும் சிரமம் இருக்காது. மூல நோயும் குணமடையும்.

வெந்தயம்

வெந்தயமானது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியதாகும். இதனை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த நீரை பருகி வந்தால் மூலநோய் குணமடையும். அதுமட்டுமல்லாது சர்க்கரை நோய் போன்ற பல நோய்களையும் குணப்படுத்தும் தன்மை வெந்தயத்திற்கு உண்டு.

Read More: சிறுநீரகம் பலம் பெற உணவு

கல்லீரலை பலப்படுத்தும் உணவுகள்