முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் நமிமில் பலருக்கு பெரிய கேள்வியாக இருக்கும்.

முகப்பருக்கள் அழகான சருமத்தையும் கெடுத்து விடும்.

இந்த அன்றாட நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் போது சாதாரணமாக முகப்பருக்களை கட்டுப்படுத்த முடியும்.

  • முகப்பருக்களை கைகளால் தொடுவதையும் கிள்ளுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • அடிக்கடி நன்றாக சுத்தமான தண்ணீரால் முகத்தை கழுவுங்கள்.
  • சூரிய கதிர் வீசுக்களால் முகம் தாக்கமடைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • மன அழுத்தத்தில் இருந்து விடுபடுங்கள்.
  • சரியான உணவு பழக்கத்தை கடைப் பிடியுங்கள்.
  • இரசாயன அழகு சாதனப் பொருட்களை முகத்தில் தடவுவதை நிறுத்துங்கள்.
  • தினமும் உடல் பயிற்சி செய்யுங்கள்.
  • ஆவி பிடித்தல்.

இயற்கையாக கிடைக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்கள் எவை முகப்பருக்களை கட்டுப்படுத்தும் என்று பார்க்கலாம்.

இயற்கையான மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களை வைத்து முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

கற்றாழை

இயற்கையாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழையை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தைகழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகப்பருக்கள் வேகமாக மறையும்.

இரவில் தூங்க செல்ல முன் சோற்றுக் கற்றாழையை முகத்திற்கு தடவி காலையில் கழுவினாலும் நல்ல பயன் கிடைக்கும்.

சோற்றுக் கற்றாழை முகப்பருக்களை இல்லாமல் செய்வதுடன் சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.

வேப்பம் துளிர்

வேப்பம் துளிரை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி முகத்தில் ஊற வைத்து தண்ணீரால் கழுவ வேண்டும்.

இது முகப்பருக்களை இல்லாமல் செய்வதுடன் சிறந்த கிருமி தொற்று நீக்கியாகவும் தொழிற்படுகின்றது.

தேன்

சரும அழகிற்கு தேன் இன்றியமையாதது. தேன் சரும அழகை அதிகரிப்பதுடன் முகப்பருக்கள் வருவதையும் தடுக்கின்றது.

பருக்கள் இருக்கும் இடத்தில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்து சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.

பூண்டு

நம் உணவுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பூண்டிற்கு முகப்பருக்களை அழிக்கும் சக்தி உண்டு.

பூண்டினை பாதியாக நறுக்கி முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

பேஸ்ட் ஆகவும் செய்து பயன்படுத்த முடியும்.

சந்தனம்

சந்தனத்தை பண்ணிரீல் கலந்து பேஸ்ட் ஆக மாற்றி முகத்தில் 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு முகத்தை கழுவ வேண்டும்.

முகப்பருக்களை இல்லாமல் செய்வதுடன் சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக சந்தனம் இருக்கும்.

எலுமிச்சை

முகப்பருக்களை வராமல் தடுக்கும் இன்னொரு இயற்கை மருந்து தான் எலுமிச்சை சாறு.

எலுமிச்சை சாற்றினை துணியில் நனைத்து இரவு தூங்க செல்ல முன் பருக்கள் இருக்கும் இடத்தில் வைத்து ஒத்தனம் கொடுக்க வேண்டும்.

இது முகப்பருக்களை குறைப்பதுடன் கிருமி தொற்று ஏற்படாமலும் தடுக்கின்றது. இதனால் பருக்கள் மற்ற இடங்களுக்கு பரவுவது தடுக்கப்படுகின்றது.

தக்காளி

சரும அழகிற்கு தக்காளி முக்கியமானது. இயற்கையாக கிடைக்கும் அழகு சாதனம் தான் இந்த தக்காளி.

முகத்தை பளபளப்பாக பிரகாசமாக மாற்றுவதுடன் முகப்பருக்களையும் குறைக்கும் தன்மை கொண்டது தக்காளி.

தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து நன்றாக ஊற வைத்து சுத்தமான நீரால் கழுவுதல் வேண்டும்.

பப்பாளி

இந்த பப்பாளி பழம் முகப்பருக்கள், தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கும் தன்மை கொண்டது.

பப்பாளி பழத்தை நன்றாக முகத்தில் தடவி ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும்.

இயற்கையாக முடி கருமையாக