மனிதனின் ஐந்து கடமைகள்

manithanin 5 kadamaigal

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பல கடமைகள் உள்ளன. கடமைகள் பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படுபவை. ஒருவரை ஒருவர் மதிக்கின்ற ஒரு பண்பாட்டில், கடமையானது, நன்னெறி அல்லது ஒழுக்க முறைமையிலிருந்து உருவாகலாம்.

கடமைகளைச் செய்யும்போது சில வேளைகளில் சொந்த நலன்களைத் தியாகம் செய்யவேண்டி ஏற்படுவது உண்டு. எனினும் சிலரால் தன்னலம் கருதியும் கடமைகள் செய்யப்படுவதுண்டு. கடமைகள் சரிவர செய்யும் போதுதான் உரிமைகள் தானாகவே கிடைக்கப்பெறும்.

ஆனால் மனிதனாய்ப் பிறந்த எல்லோரும் தமக்கான கடமைகளை செய்கின்றார்கள் என்பது கேள்விக்குறியே! மனிதனது ஐந்து கடமைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

  1. தான்
  2. குடும்பம்
  3. சுற்றம்
  4. ஊரார்
  5. உலகம்

மனிதனின் ஐந்து கடமைகள்

#1. தான்

முதலில் பிறர் நமக்கு செய்யும் கடமைகளை விட நமக்கு நாமே செய்யும் கடமைகள் தான் முக்கியம் பெறுகின்றது. அந்த வகையில் நமது முதல் முக்கியத்துவம் உடலில் வேண்டும்.

மனிதன் முதலில் தனக்கான கடமையை செய்தால்தான் பிற கடமைகளை அவனால் திறன்படச் செய்ய முடியும். தன்னைப் பற்றிய கடமைகளை விடுத்து செயற்படும்போது பிற கடமைகளை செய்திட முடியாது.

#2. குடும்பம்

ஒவ்வொரு மனிதனுக்கும் என குடும்பம் உண்டு. தனி மனிதன் ஒவ்வொருவரினதும் பிறப்பிடம் குடும்பமாகும். அத்தகைய குடும்பத்திற்கு தனது கடமைகளை செய்வதென்பது ஒவ்வொருவரது தலையாய கடமையாகும்.

தன்னையும், குடும்பத்தையும் சரிவரப் பார்க்கும் ஒருவனால் தான் சமுதாயத்திற்கான கடமையை செய்ய முடியும்.

#3. சுற்றம்

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்தான் உதவி தேவைப்படும் போது முதலில் வந்து உதவுவார்கள். இவர்கள் மீதான கடமை என்பது முக்கியமானதொன்றாகும்.

நம்மை சுற்றியுள்ள சுற்றத்தார்களுக்கு துன்பம் ஏற்படும்போது அவர்களுக்கு துணையாய் இருப்பது எமது கடமையாகும். இதுவே நம்மை சமுதாயம் சார்ந்த கடமைகளில் ஈடுபட வைக்கின்றது.

#4. ஊரார்

மனிதனுக்கு முதலில் தனக்கான கடமை அதன்பின் குடும்பம் மீதான கடமை அதனை அடுத்து மூன்றாவது கடுமையாக சுற்றத்தவர் மீதான கடமை உள்ளது. இவை மூன்றையும் தவிர நான்காவது கடுமையாக ஊரார் கடமை உள்ளது.

ஊராருக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யும் போதுதான் சமூகத்துக்கான கடமைகளை தயக்கமின்றிச் செய்ய முடியும்.

#5. உலகம்

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாள் முழுவதிலும் ஏதோ ஒரு வகையில் கடமைகளைச் செய்து கொண்டிருக்கின்றான்.

தனிமனிதன் ஒருவன் குடும்பம், சுற்றம், ஊரார் இவை அனைத்திலும் தனக்கான கடமைகளை செய்யும்போது அது தானாகவே உலகத்திற்குச் செய்யும் கடமைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவை உலக நல்வாழ்விற்கும், அமைதிக்கும் வித்திடுகின்றன.

You May Also Like :
மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள்
ஆடி மாதம் சிறப்புகள்