பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது எப்படி

பூஜை அறையில் விளக்கு ஏற்றும் முறை

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளனர். சூரியன் உதிப்பதற்கு முன் வீட்டில் விளக்கேற்றுவது மிக மிக நன்மை அளிக்கும். அதேபோல் மாலையில் சூரியன் மறைந்த பிறகு விளக்கேற்ற வேண்டும்.

பூஜை அறையில் பூஜை செய்யும் இடத்தில் விளக்கை வெறும் தரையில் வைக்கக்கூடாது. அல்லது வெறும் மேசையில் வைத்தாலும் அது சரியல்ல என்கிறது ஜோதிட நூல்.

எப்போதும் எந்த விளக்காக இருந்தாலும் அடியில் ஏதாவது ஒன்றை வைத்து விட்டு அதன் மீது தான் விளக்கை வைக்க வேண்டும். அப்படியே எதுவும் இல்லாமல் வைத்தால் அது இறைவனை அவமதிப்பதாக அர்த்தம் ஆகிவிடும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

குத்து விளக்காக இருந்தாலும் பச்சை அரிசி மீது வைக்க சொல்வார்கள். இது மிகச்சிறந்த முறையாகும். ஒரு சிறுவாழை இலை விரித்து பச்சரிசியை பரப்பி வைத்து அதன் மேல் குத்துவிளக்கு வைத்துதான் தீபமேற்ற வேண்டும்.

அதுபோல் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது ஒரு பித்தளை தட்டு அல்லது பஞ்சலோகத்தாலான தட்டின் மீது வைத்து விளக்கேற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பூஜை அறையில் எப்போதும் ஒற்றை விளக்கை ஏற்றாமல் இரண்டு விளக்கை ஏற்றுவதால் அதிஷ்டமும் நோய் இல்லாத வாழ்வும் அமையும்.

ஒளி நிறைந்துள்ள இடத்தில் அதிக நேர்மறை ஆற்றல்கள் இருக்கும். பூஜை அறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருப்பது நல்லது. விளக்கு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது நெய் போன்றவற்றை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம்.

பொதுவாக பூஜை அறையில் இரட்டை விளக்கு ஏற்றினால் அதிஷ்டம் உண்டாகும். அவை ஒரே மாதிரியான விளக்காக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். விளக்கை கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும். வேப்பம் எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

எள் எண்ணெய் தீபம் என்றும் இறைவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்பதி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும் உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

விளக்கு ஏற்றும் திசை

கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றும் போது துன்பங்கள் நீங்கி வீட்டில் இன்பம் உருவாகும்.

மேற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றும் போது நம் பொருளாதாரம் உயரும். கடன் தொல்லை தீரும்.

வடக்கு திசை நோக்கி விளக்கேற்ற திருமணத்தடை உள்ளிட்ட சுபகாரிய தடைகள் நீங்கும்.

தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

You May Also Like :
இறந்தவர்களை வழிபடும் முறை
சனி பகவான் வழிபடும் முறை