நுரையீரல் பலப்படுத்தும் உணவுகள்

nurai eeral palam pera

நமது உடலிலுள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று நுரையீரல் ஆகும். உடலுக்கு ஆற்றலை கொடுக்கக் கூடிய ஆற்றலை காற்றில் இருந்து பிரித்து எடுத்து உடலுக்கு கொடுக்கும் முக்கிய பணியினை நுரையீரல் செய்கின்றது. ஒரு நாளைக்கு சுமார் 22,000 முறை சுவாசிக்கும் நாம் 255 கன மீட்டர் காற்றை சுவாசிக்கின்றோம்.

சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும், சுற்றியுள்ள வைரஸ் மற்றும், பாக்டீரியா போன்ற தொற்றுக்கிருமிகளாலும் நுரையீரல் எளிதில் பாதிக்கப்படுகின்றது.

இவை தவிர புகைப்பிடித்தல், உடலில் இருக்கின்ற வளர்ச்சிதை மாற்றத்தினால் உண்டாகக் கூடிய பிற நோய்களினாலும் நுரையீரல் பாதிப்படைகின்றது.

நுரையீரல் பாதிப்பு அறிகுறிகள்

நுரையீரல் பாதிக்கப்பட்டால் அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புகளை உருவாக்கி விடும்.

பொதுவாக ஒருவரின் நுரையீரல் நன்கு இல்லை என்பதனை நமது உடலில் தெரியும் அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

அத்தகைய அறிகுறிகள் யாதெனில், ஒருவருக்கு பல நாட்கள் இருமல் இருந்தும், அவர் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டும் இருமல் சரியாகவில்லை என்றால் அது நுரையீரல் சரியாகச் செயல்படாமைக்கு அதிக சாத்தியகூறுகள் உள்ளன.

சில வேளைகளில் இருமலின் போது நெஞ்சு வலி ஏற்படலாம். இந்த வலி அப்படியே பரவி தோள்ப்பட்டை வரை சென்றால் அவர் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஒருவர் அன்றாட வேலைகளை செய்யும்போது மூச்சுத் திணறலை அனுபவித்தால் அவருக்கு நுரையீரல் பிரச்சினை உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.

மேலும் இருமல் கடுமையாக இருக்கும் போது வெளிவரும் சளியானது நிறம், அடர்த்தி, அளவு அதிகரித்தல் மற்றும், சளியிலிருந்து நாற்றம் வந்தால் மேலும் சளியின் நிறம் மஞ்சள், பச்சை அல்லது, ரத்தம் கலந்த வந்தால் நுரையீரலில் பாதிப்பு உள்ளது என அறிந்து கொள்ளலாம்.

நுரையீரல் பலப்படுத்தும் உணவுகள்

நுரையீரல் நோய்கள் வராமல் தடுப்பதற்கும், வந்த பின் விரைவில் குணமடைவதற்கும் நமது நுரையீரலின் ஆற்றலை அதிகப்படுத்துவது அவசியம் ஆகும். அவ்வகையில் நுரையீரலைப் பலப்படுத்தும் உணவுகளை பற்றி காண்போம்.

மிளகு

மிளகானது உடல் உறுப்புகளுக்குள் உள்ள கழிவுகள் மற்றும், நச்சுக்களை வெளியேற்றும் சிறந்த பொருளாக பயன்படுகின்றது. இதில் உள்ள காரத்தன்மையும், மருத்துவக் குணங்களும். தொண்டை மற்றும், நுரையீரல் பகுதிகளின் தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்தும் நுரையீரலை பலப்படுத்துகின்றது.

மஞ்சள்

மஞ்சள் கிருமி தொற்றுக்களை அளிக்கும் சிறந்த கிருமிநாசினியாக செயல்படும் உணவுப் பொருளாகும் மஞ்சளில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்சிடென்ட் தன்மையும், குக்குமின் எனும் வேதிப்பொருளும் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை வேகமாக அதிகரிக்க செய்கின்றது.

தூய தரமான மஞ்சள் தூளை மிளகு மற்றும், பூண்டுடன் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் நுரையீரலில் உள்ள அலர்ஜி, சுவாச பாதை பிரச்சனை, தொண்டைக் கரகரப்பு, தொண்டைத் தொற்றுகள் போன்றன குறையும்.

பூண்டு

பூண்டில் இயற்கையாக இருக்கும் அலிசின் எனும் ஆண்டிபயாட்டின் சத்து நுரையீரல் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை அழிக்கும் தன்மை கொண்டது.

Read More: கிவி பழம் நன்மைகள்

மத்தி மீன் நன்மைகள்