திருமண வாழ்த்து மடல்

திருமண வாழ்த்து வசனம்

இந்த பதிவில் “திருமண வாழ்த்து மடல்” பதிவை காணலாம்.

  • திருமண வாழ்த்து வசனம்
  • திருமண வாழ்த்து மடல்
  • இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண வாழ்த்து மடல்

#1. மனம் கொண்ட காதலுடன்,
மண வாழ்க்கை அதனை மனம் ஒன்றி எப்பொழுதும்,
மகிழ்வுடன் வாழ்ந்திடவே
மனதார வாழ்த்துகின்றோம்.
மனம் எல்லாம் மகிழ்வுடனே.!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

#2. இனிக்கட்டும் உங்கள் திருமண பயணம்.
திருப்திகரமான மணவாழ்க்கை என்றுமே தொடரட்டும்.
குறைவின்றி சந்தோசமும்,
குதூகலமும் வாழ்க்கை முழுவதும் தித்திக்கட்டும்.!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

#3. இருமனம் இணைந்த இனிய திருமண இந்நாளில்,
சகல செல்வங்களும் பெற்று இறையாசியுடன்
வளமோடு நலம் சூழ வாழ்க பல்லாண்டு
என அகமகிழ்ந்து வாழ்த்துகின்றோம்.!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!!.

#4. மூத்தோரின் நல்லாசியுடன்
குட்டி குட்டி தேவதைகள் பூ மழை பொழிய
அழகு வதனத்தில் இளநகை பூசி அலங்காரப் பதுமையாய்
ஆயிரம் கனவுகளுடன் மணமேடை ஏறி
அன்புக் கணவனுடன் கை கோர்த்து
செல்வங்கள் கோடிகள் சேர்த்து
இலக்குகளை அன்பால் கோர்த்து
என்றுமே ஒருவர் முகம் ஒருவர் பார்த்து
அன்பான வார்த்தைகளை அளவற்று வார்த்து
இல்லற வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம்
தடையின்றி பிரகாசிக்க
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

#5. ஆன்றோர் வாழ்த்துரைக்க,
ஆயிரமாய் பூச்சொரிய,
மங்கை திருமகளாய்,
மணவறையில் காத்திருக்க…
நாதசுர மேளங்கள் நல்லதொரு வாழ்த்திசைக்க,
நங்கை திருக்கழுத்தில் நம்பி அவன் நாண்பூட்ட…
கட்டியவன் கட்டழகை கடைக்கண்கள் அளவெடுக்க,
மெட்டியவன் பூட்டிவிட,
மெல்லியலாள் முகம் சிவக்க…
இவள் பாதி யிவன் பாதி,
என்றிணைந்திட்ட மணவாழ்வில்…
இல்லறத்தின் இலக்கணமாய்
இரு மனமும் வாழியவே!
திருமணத்தின் இன்பங்கள் திகட்டாது தொடர்ந்து வர,
ஓருயிராய் ஆருயிராய் மணமக்கள் வாழியவே!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண வாழ்த்து வசனம்

#6. இன்பத்தில் இணைந்து துன்பத்தில் தோள் கொடுத்து,
கடமையில் கண்ணாயிருந்து,
பிடிவாத குணங்களில் விட்டுக்கொடுத்து,
உறவுகளுடன் ஒன்றாக கலந்து,
தாம்பத்திய வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து
மொத்தத்தில் குடும்பம் என்ற ஒன்றில் சங்கமம் ஆகி
என்றும் புன்னகையோடு வாழ்ந்து காட்டுங்கள்.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

#7. கெட்டிமேளம் கொட்ட வரிசங்கும் நின்றூத,
நாதஸ்வர ஓசையில் மாங்கல்யம் தந்துனானே
என்று அந்தனர் வேதம் ஓத,
திருமாங்கல்யத்தை எடுத்து மணமகளின் கழுத்தில் கட்டும் போது,
கைகளில் வரும் நடுக்கம் பாருங்க.
அந்த சமயத்தில் இவள் இனி எனக்குரியவள்
எந்த இடர்பாடு வந்தாலும் அதை உடைத்தெறிந்து,
என் கடைசிமூச்சு வரை கண்கலங்காமல் காப்பாற்றவேண்டும்
என்ற உறுதிமொழி எடுப்பவனே ஆகச்சிறந்த மணவாளன் ஆவான்.
அதேபோல மணமகளும் தன்மனதுக்குள்
தாலிகட்டியகணவனின் சொந்தங்கள் இனி எனது சொந்தங்கள்.
அவர்களை என் பிறந்த வீட்டினரைப்போல
அன்பு காட்டி அரவணைப்பேன்.
அவர்களது மனம் கோனாமல் நடந்து கொள்வேன்
என்று மனதுக்குள் சங்கல்பம் செய்து கொள்வாள்.
இத்தகைய மேன்மைமிக்க இந்நாளை
மதித்திடுவோம். போற்றிடுவோம்.
இனிய அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்..!!

#8. இறைவனின் ஆசியோடு  உங்கள் மண வாழ்க்கையை வாழ்த்துரைக்க!
ஆயிரமாயிரம் புன்னகை பூக்களாய்
மங்களத்  திருமகளாம் (மணமகள்_பெயர்))
மணவறையில் காத்திருக்க!
திருமகனின் வரவிற்காய்
எதிர்நோக்கும் நன்னாளில்!
மேளதாளத்துடன்  உற்றார் உறவினர்
மற்றும் நண்பர்கள் படை சூழ!
இறைவனின்  வாழ்த்துக்களோடு 
அன்பின் திருமகனாம் (மணமகன்_பெயர்)
ஆரவாரத்துடன் வருகைசூழ!
இருமனமும் ஒருமனமாய் மாறியதே
இன்னாளில்! ஆகா!எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே கொட்டும் மழையும்
பூவாய் பொழியவே!
அத்தனை மக்களும் அன்போடு
வாழ்த்த உங்கள் மண வாழ்க்கை
இன்பமாய் வாழ! இறைவனின் துணையோடு!
அன்பாய் வாழ்த்துகிறோம்
நாங்கள் எல்லோருமே!
இருமனத்தின் எண்ணங்கள் ஒருமனமாய்
இன்றுபோல் திகட்டாது தொடர்ந்து வாழவே!
ஓருயிராய் ஆருயிராய் பண்போடு என்றும்
மணமக்கள் போல் அன்போடு வாழவே!
இல்லறத்தின் இலக்கணமாய் இருமனமும்
ஒருமனமாய் என்றென்றும் வாழவே!
அன்பும் பண்பும் பாசத்தொடும் என்றென்றும்
ஆன்றோர் சான்றோர் போற்றும்படி வாழவே!
குழந்தைகள் செல்வத்தோடு பல்லாண்டு வாழ
கிட்டா புகழும் எட்டா சிறப்பும் பெற்று வாழவே!
இறைவனின் வழித்துணையோடு வாழ 
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்…

#9. இணைந்தது கரங்கள் மட்டுமல்ல…
இதயங்களும் என்பதை மறவாதே….
ஒருவரை ஒருவர் உயிராய் நேசியுங்கள் 
அன்பே என்று அழைத்திடுங்கள்!
ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!
இதயங்களை ஈரத்திடுங்கள்!
ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!
உறவுகளை நினைத்திடுங்கள்!
ஊடல்களை மறந்திடுங்கள்!
எளிமைக்கு வழிவிடுங்கள்!
ஏழ்மைக்கு உதவிடுங்கள்!
மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ்க
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

#10. இணைந்தது கரங்கள் மட்டுமல்ல…
இதயங்களும் என்பதை மறவாதே….
ஒருவரை ஒருவர் உயிராய் நேசியுங்கள்.
உங்களைப்போலவே 
உங்கள் துணையின் உறவுகளையும் நேசியுங்கள்.
உங்களுக்குள் ஒருவருக்காக
இன்னொருவர் போட்டி போடுங்கள் –
அன்பை காட்டுவதில் மட்டும். 
நிறைய விட்டுக்கொடுங்கள் உங்களுக்குள். 
விட்டு கொடுக்காதீர்கள் உங்களின் 
இணைகளின் மரியாதையை மற்றவர்களிடத்தில். 
காரணம் இனி அவர்தான் நீங்கள்
நீங்கள்தான் அவர் என மனதில் வையுங்கள். 
எல்லா நலமும் வளமும் பெற்று பெருவாழ்வு
வாழவேண்டும். பலன்களை பாராது,
உணர்வுகளோடு கலந்து,
உள்ளத்தோடு மகிழ்ந்து,
புன்னகையோடு பூத்து,
ஒவ்வொரு நாளும் புதுமையாய் வாழ்கவே நீவீர்…
இனிய மணநாள் வாழ்த்துக்கள்

You May Also Like:

அம்மா கவிதை வரிகள்

திருமண நாள் வாழ்த்து

திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை