செம்பருத்தி இலையின் பயன்கள்

செம்பருத்தி இலை பயன்கள்

செம்பருத்தி மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகிய பூச்செடி வகையைச் சேர்ந்ததாகும். செம்பரத்தியின் ஆங்கிலப் பெயர் Hibiscus என்பதாகும். இதனை “மார்ஷ் மாலோ” என்றும் அழைக்கின்றனர்.

வீட்டுத் தோட்டங்களிலும், பூங்காக்களிலும், கோயில்களிலும் இச் செடியைக் காணலாம்.

செம்பருத்தி இலைகள் கூர்மையான நுனி விளிம்புகள் பற்களுடன் கூடிய அடர்த்தியான பச்சை நிறமானவை.

செம்பருத்தி இலையின் பயன்கள்

1. செம்பருத்தி இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை.

2. இலையின் சாறு கூந்தலைக் கறுப்பாக்க உதவுவதுடன் முடியைப் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற செய்யும். செம்பருத்தி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை தலைமுடியில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். கூந்தல் வளச்சிக்கான தைல தயாரிப்பில் செம்பருத்தி இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறன. இலைகளை அரைத்து குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம்.

3. செம்பருத்தி இலையை அரைத்து தண்ணீரில் கொதிக்கவைத்து சாப்பிட வெள்ளை வெட்டை நோய் குணமாகும்.

4. கண்நோய்கள், சூடு கட்டி, கண் எரிச்சல் போன்ற கண் நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

5. சிறுநீர் எரிச்சலை குணமாகும். சிறுநீர் எரிச்சலைக் குணமாக்க 4 செம்பருத்தி இலைகளை 2 டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். செம்பருத்தி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது இரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

7. உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லதாக விளங்குகிறது.

8. செம்பருத்தி இலை உணவிற்கு நிறத்தை சேர்க்கும் பொருளாகவும் இது சந்தையில் விற்கப்படுகிறது.

9. புற்று நோயை எதிர்த்து போராட உதவுகின்றது. அதற்கு செம்பருத்தி இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களின் மீதும் தடவலாம்.

10. சளி மற்றும் இருமலை குணமாக்கும். செம்பருத்தி இலையில் வைட்டமின் சி உள்ளதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுகின்றது.

11. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செம்பருத்தி இலை ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

12. மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்க உதவுகிறது. செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியை போக்கும்.

13. செரிமானத்திற்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.

14. சிறுநீரகப் பிரச்சனைகளை போக்கும். இதற்கு செம்பருத்தி இலை கலந்த தேநீரைப் பருகலாம்.

15. கொலஸ்ட்ராலைக் குறைக்கும். உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலிலுள்ள தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுகின்றது.

You May Also Like :
வேப்பம் பூ மருத்துவ பயன்கள்
மருதாணி இலையின் பயன்கள்