உலக தாய்மொழி தினம் கட்டுரை

thai mozhi katturai in tamil

இந்த பதிவில் “உலக தாய்மொழி தினம் கட்டுரை” பதிவை காணலாம்.

ஒவ்வொருவருக்கும் தமது தாய் மொழி என்பது மிகவும் அவசியமானதாகும். அதனை ஆர்வத்துடன் கற்கவும் எழுதவும் வேண்டும்.

உலக தாய்மொழி தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உருவான வரலாறு
  3. எமது தாய்மொழி
  4. தமிழ்மொழியின் பெருமைகள்
  5. அடையாளம்
  6. முடிவுரை

முன்னுரை

ஒரு தாயிடம் இருந்து ஒரு குழந்தை கற்றுகொள்கின்ற மொழியினையே தாய் மொழி என்று அழைக்கலாம் அந்தவகையில் இங்கே வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களுக்கும் தாய்மொழி உணர்வு ரீதியானது.

தாய்மொழியில் சிந்திப்பதே நல்லறிவு என்று உலக அறிஞர்கள் ஆய்வு ரீதியாக இதனை நிரூபிக்கின்றனர் இத்தகைய தாய்மொழியே ஒப்பற்ற பல சிந்தனைகள் உருவாகவும் வழிவகுக்கின்றது.

உலகமெங்கும் ஆறாயிரம் மொழிகள் உள்ளன அவற்றில் ஒரு சில மொழிகளே தாய்மொழியில் கல்வி கற்பிக்கின்ற சிறப்புடையன தாய்மொழியின் பெருமை பேசும் தாய்மொழி தினம் தொடர்பாக இக்கட்டுரையில் காண்போம்.

உருவான வரலாறு

கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்படும் வங்கதேசம் பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில் ஒரு மொழி சார்ந்த புரட்சி இடம்பெற்றது 1952ல் இது இடம்பெற்றது.

இது வங்க தேசத்து இளைஞர்கள் தமது வங்காள மொழியை காக்க பாக்கிஸ்தான் அரசுக்கு எதிராக போராடியிருந்தனர். இதனால் பங்களாதேஷ் என்ற நாடு உருவானது.

இதனை தொடர்நது கனடாவில் வசித்து வந்த “ரபிக்குல் இஸ்லாம்” வங்கதேசத்து இளைஞர் ஐக்கியநாடுகள் சபைக்கு கொடுத்த மனுவின் பிரகாரம் தான் சர்வதேச அளவில் தாய்மொழி தினம் பெப்ரவரி 21 ம் திகதி கொண்டாடப்பட காரணமாக அமைந்தது.

எமது தாய்மொழி

எமது தாய்மொழியான தமிழ் மொழியானது உலகின் தொன்மையான மொழியாக கீழடி ஆய்வுகளின் பிரகாரம் நிரூபிக்கப்பட்டது. செம்மொழி என்ற பெருமை உடைய மொழியாக உயர்ந்திருப்பது இந்த மொழியை பேசுகின்ற எம் அனைவருக்கும் கிடைத்த பெருமை என்றே கூறலாம்.

உலகத்தின் பல இடங்களில் இன்று தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதனால் தமிழ்மொழியும் உலகமெங்கும் பேசப்பட்டு கொண்டிருக்கின்றது. தமிழ் மொழி என்பது வெறுமனே மொழி அன்றி அது நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற உணர்வாக விளங்குகின்றது.

தமிழ் மொழியின் பெருமைகள்

தமிழ் மொழியின் பெருமைகள் பற்றி சொல்வதாக இருந்தால் அது எண்ணற்றவையாகும்.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே” என்ற வரிகள் மூலம் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட மக்களின் பெருமையின் உச்சம் புலனாகிறது.

3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இலக்கிய இலக்கண பெருமைகளை உடையதாகவும் விளங்குகின்றது.

எந்த ஒரு காலகட்டத்துக்கும் தன்னை தகவமைத்து கொள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்கு இருப்பதனை காணலாம். இதனால் தான் இன்றும் அழியாத மொழியாய் இது விளங்குகின்றது.

அடையாளம்

தாய் மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. தாய்மொழியை காப்பதற்காக இந்த உலகமெங்கும் பல புரட்சிகள் தோன்றயிருக்கின்றன.

மொழி தான் பண்பாடு கலாச்சாரம் போன்ற தனித்துவ இயல்புகளை பிரதிபலிக்கின்றது.

ரஸ்யா, கியூபா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இன்றுவரை தாய்மொழியில் தான் கல்வி கற்று வருகின்றனர். அதனுடைய பயன் என்னவெனில் அந்த நாடுகள் சிறப்பான இலக்கிய வெளிப்பாடுகளையும் உலக அளவில் அவற்றின் தனித்துவ அடையாளங்களையும் வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.

முடிவுரை

“யாமறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிதாவதெங்கும் காணேன்” என்ற பாரதியின் வரிகளை போல் எம் தாய் மொழியான தமிழ் மொழி சிறப்புற நாம் அதனை பாதுகாத்திடல் வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தமது தாய் மொழி என்பது மிகவும் அவசியமானதாகும். அதனை ஆர்வத்துடன் கற்கவும் எழுதவும் வேண்டும்.

சுவாசிக்காமல் மனிதனால் எப்படி வாழ முடியாதோ அது போல் தாய்மொழியை பேச முடியாது போவதும் அப்படியே. எல்லா மொழிகளையும் மதிப்போம் அவர் அவர் தாய்மொழிகளையும் காப்போம்.

You May Also Like :
மொழியும் பண்பாடும் கட்டுரை
தாய்மொழி பற்றி கட்டுரை