இயற்கை வேளாண்மை கட்டுரை

iyarkai velanmai katturai in tamil

ஒவ்வொரு நாட்டினுடைய முதுகெலும்பாகவும் விவசாயம் காணப்படுகின்றது. இந்த விவசாயமானது இன்று பலருடைய ஜீவனோபாய தொழிலாகவும், வருமானத்திற்கான வழியாகவும் காணப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் இயற்கை வேளாண்மை முறை அதிகமாக பின்பற்றப்பட்ட போதிலும், தற்காலங்களில் செயற்கையான வேளாண்மை முறை அதிகம் நடைமுறைப்படுத்தப்படுவதனை நாம் காண முடிகிறது.

இயற்கை வேளாண்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன
  • இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம்
  • இயற்கை வேளாண்மையின் நன்மைகள்
  • தற்காலங்களில் இயற்கை வேளாண்மைக்கான வரவேற்பு
  • முடிவுரை

முன்னுரை

இயற்கை வேளாண்மையின் சிறப்புகளை அனுபவிக்கும் நோக்குடனே இன்று பல நாடுகள் இதனைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் 1966 ஆம் ஆண்டு தமிழக அரசு நாட்டில் இயற்கை விவசாயம் செழிக்க வேண்டும் என்ற நோக்கில் பசுமைப் புரட்சியை உருவாக்கியது.

தற்காலங்களில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இயற்கை விவசாய நடைமுறைகளை காண முடியும். இக்கட்டுரையில் இயற்கை வேளாண்மை பற்றி நோக்கலாம்.

இயற்கை வேளாண்மை என்றால் என்ன

பூச்சிக்கொல்லிகள், இரசாயன கிருமி நாசினிகள் போன்றன இல்லாமல் பயிர்கள், மரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றை இணைத்த ஒரு வேளாண்மை முறையே இயற்கை வேளாண்மை எனப்படுகின்றது.

அதாவது செயற்கையான உரங்களுக்கு பதிலாக இங்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய தாவர உள்ளீடுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ஒரே பண்ணையில் இருந்து அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் இருப்பதாகவும் இந்த இயற்கை வேளாண்மை காணப்படுகின்றது.

இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம்

மண்வளம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் இயற்கை வேளாண்மை அவசியமானதாகும். அதாவது இரசாயன பதார்த்தங்களோ, பூச்சி நாசினிகளோ அல்லாது விவசாயம் மேற்கொள்ளப்படும் போது மண்ணின் சிறப்பு தன்மைகளும் சிதைவடையாமல் பாதுகாக்கப்படும்.

மேலும் இயற்கையை வாழ் உயிர்களான பூச்சிகள், புழுக்கள் என்பனவும் கொல்லப்படாமல் தடுக்கப்படும். இவ்வாறாக இயற்கையான வேளாண்மையின் மூலம் நீர், சூழல் போன்றவற்றின் மாசுபாடுகளும் குறைவடையும். எனவே இந்த இயற்கை வேளாண்மை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே காணப்படுகின்றது.

இயற்கை வேளாண்மையின் நன்மைகள்

மனிதன் இயற்கையான வேளாண்மையினை கடைப்பிடிப்பதன் மூலமாக பல்வேறு நன்மைகளினை அடைந்து கொள்கின்றான்.

அந்த வகையில் செலவு குறைவாகவும் இலாபம் அதிகமாகவும் பெற்றுக் கொள்ளுதல், மண்ணின் வளங்களை பாதுகாக்க முடிதல், ஆரோக்கியமான தூய்மையான உணவுப் பொருட்களை பெற முடிதல், நிலத்தடி நீரை பாதுகாக்க முடிதல்,

காய்கறிகளை நீண்ட நாட்களுக்கு உபயோகிக்க முடிதல் மற்றும் உணவின் தரம் பாதுகாக்கப்படுதல் போன்றவாறான பல நன்மைகளை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்.

தற்காலங்களில் இயற்கை வேளாண்மைக்கான வரவேற்பு

நாம் வாழக்கூடிய தொழில்நுட்ப யுத்தத்தில் வாழக்கூடிய மனிதன் பல்வேறு நோய்களினால் சூழப்பட்டவனாகவே காணப்படுகின்றான்.

இவ்வாறு மனிதனுடைய ஆரோக்கியம் வீழ்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக உணவுப் பழக்க வழக்கமே காணப்படுகின்றது.

அதாவது தற்காலங்களில் செயற்கையான விவசாய முறைகளின் மூலம் நச்சுத்தன்மை மிக்க உணவுகளை அதிகம் உட்கொள்வதற்கு மனிதன் தலைப்படுகின்றான்.

எனவே அவனது உடலும் பலமிழந்து செல்கின்றது. ஆகவே தான் தற்காலங்களில் இயற்கையான வேளாண்மை அவசியம் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் எழுந்து அதற்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது.

முடிவுரை

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமானதாகும். அதேபோன்று அம் மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த, தூய்மையான, சத்துள்ள உணவின் தேவையையும் அவசியமானதாகும்.

அந்த வகையில் செயற்கையான வேளாண்மையை விட இயற்கையான வேளாண்மை மூலம் மனிதன் தன்னுடைய ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எனவே நாம் ஒவ்வொருவரும் இயற்கை வேளாண்மை மூலம் பெறக்கூடிய நன்மைகளை விளங்கிச் செயற்பட வேண்டும்.

Read More: இயற்கை வளம் காப்போம் கட்டுரை

மரம் இயற்கையின் வரம் கட்டுரை