பசுமை புரட்சி என்றால் என்ன

pasumai puratchi enral enna

பசுமை புரட்சி என்பது ஒரு விவசாய சீர்திருத்தமாகும். இது 1950-1960களின் பிற்பகுதி வரை உலகளவில் பயிர்களின் உற்பத்தியை அதிகரித்தது. பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க நல்ல தரமான மூலப்பொருட்களுடன் உயர்தர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினர்.

தொழில்நுட்பத்தின் வருகை உலகளாவிய விவசாயத்தை மாற்றியது. மற்றும் இந்தியா உட்பட பல்வேறு வளரும் நாடுகளை வெகுஜன பஞ்சத்திலிருந்தும் தடுத்தது.

இந்தியாவில் இதை ஆரம்பித்தவர் “எம்.எஸ்.சுவாமிநாதன்” ஆவார். இவரே இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையாவார்.

பசுமை புரட்சி என்றால் என்ன

பசுமை புரட்சி என்பது நாட்டில் உணவுத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக உணவு, தானிய உற்பத்தியைப் பெருக்குவதற்காக விவசாயத்தில் கொண்டுவரப்பட்ட மாபெரும் ஒரு புரட்சியே பசுமைப் புரட்சியாகும்.

பசுமைப் புரட்சியின் வரலாறுக் கண்ணோட்டம்

நார்மன் போர்லாக் என்ற அமெரிக்க விஞ்ஞானி பசுமைப் புரட்சியின் தொடக்கத்திற்குக் காரணமானவர். 1904களில் மெக்சிகோவில் ஆராய்ச்சி செய்யும் போது, அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கோதுமையின் புதிய உயர் விளைச்சல் வகைகளை உருவாக்கினார்.

மெக்சிகோ உயர்தர இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயத் தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்ததால், அது தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய முடிந்தது. அதனால், 1960களில் கோதுமையின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக மாறியது.

இந்த வகைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, நாட்டின் கோதுமையில் கிட்டத்தட்ட பாதி இறக்குமதி செய்யப்பட்டது.

மெக்சிகோவில் பசுமைப் புரட்சியின் வெற்றியை தொடர்ந்து, 1950கள் மற்றும் 1960களில் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.

1950களில் பசுமைப் புரட்சியின் மூலம் அமெரிக்கா தனது சொந்த தேவைகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல் கோதுமை இறக்குமதியாளராக இருந்து ஏற்றுமதியாளராக மாறியது. அமெரிக்காவைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பசுமைப் புரட்சியால் பயனடைந்தன.

இந்தியாவின் பசுமைப் புரட்சி

நிதி பற்றாக்குறை, குறைந்த மகசூல் தரும் மூலப்பொருள், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பற்றாக்குறை போன்றவற்றால் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தின் ஆரம்ப ஆண்டுகளில் இந்திய விவசாய முறை மிக மோசமான நிலையில் இருந்தது.

விவசாயத் துறையின் மோசமான நிலையைப் புரிந்துகொண்டு, இந்திய அரசாங்கம் பசுமைப் புரட்சியை தொடங்கியுள்ளது. இதன் மூலம் அதிக விளைச்சல் தரும் வகை (HYV) விதைகளின் பயன்பாடு நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனுடன், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மிகவும் பயனுள்ள உரங்களின் பயன்பாடு ஆகியவை நடந்தன. இவை அனைத்தும் சேர்ந்து இந்தியாவில் உயர்தர பயிர்களை பெருமளவில் உற்பத்தி செய்ய வழிவகுத்தது.

1965 ஆம் ஆண்டு எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் இந்திய அரசு பசுமைப் புரட்சியை 1967-1978 வரை நீடித்தது. இந்திய விவசாயத்தில் HYV விதைகளை அறிமுகப்படுத்தியதே மிகவும் பயனுள்ள அம்சமாகும்.

சரளமான நீர்ப்பாசன வசதிகள் உள்ள பகுதிகளில் விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே, முதல் கட்டம் பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு மீது கவனம் செலுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், பிற மாநிலங்களும் சேர்க்கப்பட்டு கோதுமை தவிர பல்வேறு பயிர்களுக்கான விதைகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த புரட்சியில் உள்நாட்டு நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் தங்கள் நீர் தேவைகளுக்கு பருவமழையை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதினாலாகும்.

Read more: விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை

பசுமை இந்தியா கட்டுரை