மார்கழி மாதம் சிறப்புகள்

margali matham sirappu in tamil

மார்கழி மாதமானது பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய மாதமாகும். இம்மாதம் மகத்துவம் நிறைந்த மாதம் ஆகும். ஆன்மீகத்திற்கு என்று ஒரு மாதமே சிறப்பு வாய்ந்தது என்றால் அது மார்கழிதான்!

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார். அவரே, கீதையில் “மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்” என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய சிறப்பு மிக்க மார்கழி மாதத்தின் மேலும் பல சிறப்புக்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

மார்கழி மாதம் சிறப்புகள்

சிறப்பு பெயர்

மார்கழி மாதத்திற்கு தனுர் மாதம் என்ற பெயரும் உண்டு. சைவர்கள் இம்மாதத்தை தேவர் மாதம் என்றும் குறிப்பிடுவர்.

தெய்வ வழிபாட்டுக்கு உகந்த மாதம்

மார்கழி மாதமானது தெய்வீகம் தவளக் கூடிய மாதமாகும். இம் மாதத்தில் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டால் அவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். மேலும் மார்கழி மாதத்தை இறை வழிபாட்டிற்குரிய அற்புதமான மாதமாக ஆன்மீகம் குறிப்பிடுகின்றது.

பிராண வாயு

பிரபஞ்சத்தில் மார்கழி மாதத்தில் தான் ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மார்கழி மாதத்தில் ஓசோன் படலத்திலிருந்து வரும் சுத்தமான காற்றைப் போல் வேறெந்த மாதத்திலும் கிடைப்பதில்லை. அதனால் தான் அதிகாலையிலேயே எழுந்து கோலம் போடுமாறு முன்னோர்கள் வழிவகுத்து சென்றுள்ளனர்.

தானம்

இம்மாதத்தில் செய்யும் எந்த ஒரு தானமும் நமக்கு பெரும் பாக்கியத்தைச் சேர்க்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது. மார்கழி மாதத்தில் தானம் செய்வதும் பாவங்களை நீக்கி புண்ணியத்தை சேர்க்கும் என்பது ஜோதிட நம்பிக்கை. இம்மாதத்தில் கம்பளி போன்றவற்றை தானம் கொடுப்பது சிறந்ததாகும்.

வருடம் முழுவதும் பலன்

மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஒருநாள் இறைவனை வழிபாடு செய்தால், ஒரு வருடம் இறைவழிபாடு செய்த பலனை நமக்கு கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே மார்கழி முழுவதும் தவறாமல் இறைவழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் மிகச்சிறந்த பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்த மாதம் மார்கழி மாதமாகும்

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்ட போது, கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டனர். அப்போது கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியது இந்த மார்கழி மாதத்தில்தான்.

மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி

மார்கழி மாதமானது மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது.

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதங்களில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்று கருதப்படுகிறது.

நாயன்மார்களின் குருபூஜை

இம்மாதத்தில் 63 நாயன்மார்களில் வாயிலார் நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகிறது.

ஆண்டாள் திருப்பாவை

விஷ்ணு பகவானை மணக்க, பெரியாழ்வாருக்கு மகளாகப் பிறந்த ஆண்டாள், மார்கழி மாதம் “மார்கழித் திங்கள் அல்லவா…” என்று ஆரம்பித்து, 30 பாசுரங்களை தினம் ஒன்றாகப் பாடி வழிபட்டு மணந்தார் என்பதும் இம்மாதத்தின் சிறப்பு அம்சமாக உள்ளது.

You May Also Like :
ஆடி மாதம் சிறப்புகள்
கார்த்திகை மாத சிறப்புகள்