அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Athi Pazham Benefits In Tamil

இந்த பதிவில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் “அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்” பற்றி பார்க்கலாம்.

அத்திப் பழம் பார்ப்பதற்கு கூம்பு வடிவில் வித்தியாசமான நிறத்தில் காணப்படும். அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழமாகும். பெரும்பாலும் களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும்.

இது 6 அல்லது 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அத்திப்பழம் இரண்டு வகைப்படும். சீமை அத்தி, நாட்டு அத்தி என்பனவே அவையாகும். அத்திப்பழம் கொத்துக் கொத்தாய் காய்க்கக் கூடியது. பழுத்ததும் உட்புறம் சிவப்பாக காணப்படும்.

விதைகள் ஆலம் பழத்தில் இருப்பது போல் சிறியதாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு தடவை அறுவடை செய்யக் கூடியது. யாருக்கும் தெரியாமல் ஒரு காரியம் செய்துவிட்டால் “அத்தி பூத்தாற்போல்” என்று கூறுவர்.

அத்தி மரத்தில் பூ பூப்பதை நம்மால் இலகுவில் அடையாளம் காண முடியாது. பூக்கள் மரத்தின் அடியிலிருந்து உச்சி வரை மரத்தை ஒட்டியே பூக்கும். அப்பூக்கள் காயாகும் போதுதான் தெரியவரும். இதனால் தான் அத்தி பூத்தாற் போல் என்று கூறுவர்.

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1.இரண்டு அத்திப்பழங்களைத் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தத்தின் உற்பத்தி அதிகரிக்கும். சீரான இரத்த ஓட்டத்துக்கு உதவும்.

2. நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். தினமும் இரவில் சாப்பாட்டின் பின்பு அத்திப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமடையும்.

3. ஜீரண உறுப்புகளை நன்முறையில் பேணும். எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளைச் சுறுசுறுப்பாக இயங்க செய்ய உதவுகின்றது.

4. மாதவிடாய் நின்ற பின்பு ஏற்படுகின்ற மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும். பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைபடுதலைத் தடுக்கக்கூடியது.

5. ஆண்மையை பெருக்கும், பால் உணர்வு அதிகமாகும். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 5 தொடக்கம் 10 வரையான அத்திப்பழங்களைச் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் தாது விருத்தியாகும். ஆண் மலட்டு தன்மை நீங்கும்.

6. அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு சக்தி கிடைக்கும். அளவற்ற போஷாக்கை பெறலாம்.

7. அத்திப்பழங்களை வினிகரில் ஒரு வாரம் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் போதைப்பழக்கம் நீங்குவதுடன் வியாதிகளினால் ஏற்படும் கல்லீரல் வீக்கம் குணமடையும்.

8. உடல் கொழுக்கு மொழுக்கென்று வளர அத்திப்பழம் சிறந்தது.

9. தோலில் உள்ள வியாதிகள் குணமாகும். தினசரி ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமாகும்.

10. பொதுவாக எலும்பு வளர்ச்சி அடைய கல்சியம் அவசியமாகின்றது. அத்திப்பழத்தில் அதிகளவு கல்சியம் இருப்பதால் எலும்பு வலுவடையும். மூன்று அத்திப்பழங்களை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால், அதிக அளவு கல்சியம் கிடைப்பதுடன் எலும்பு தொடர்பான நோய்கள் வராமலும் தடுக்கலாம்.

11. உடல் எடையைக் குறைக்க வல்லது. அதிக உடல் எடை கொண்டவர்கள் தினமும் மூன்று அத்திப்பழங்களை நீரில் ஊறவைத்து மறுநாள் நீருடன் அத்திப் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

12. முதுமையில் ஏற்படும் கண் பிரச்சினையைத் தடுக்க அத்திப்பழம் சிறந்த மருந்தாக செயல்படுகின்றது. விட்டமின் A, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழங்களில் அதிகளவில் அடங்கியுள்ளன.

13. ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் மூன்று வேளைகளிலும் ஒரு வேளைக்கு மூன்று என்ற விகிதத்தில் அத்திப்பழங்களைச் சாப்பிட்டு வந்தால் குணமடைவர். அத்திப் பழத்தில் இரும்புச்சத்து உள்ளதால் ஒரே மாதத்தில் ஒரு கிராம் வரை ஹீமோகுளோபினின் அளவை உயர்த்தலாம்.

14. கடுமையான இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும் போதிய இரத்தம் இன்றி இருக்கும் கர்ப்பிணிகளும் அத்திப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நன்மை கிடைக்கும்.

You May Also Like:

ரணகள்ளி மருத்துவ பயன்கள்
இலவங்கப்பட்டை பயன்கள்