நெருஞ்சி முள் பயன்கள்

nerunchi mul benefits

நெருஞ்சி ஒரு முள் வகையைச் சேர்ந்ததாகும். நம் முன்னோர்கள் முற்காலத்தில் இதனை ஆரோக்கிய பானமாகப் பயன்படுத்தி வந்தனர். மணற்பாங்கான இடங்களின் தரையில் படர்ந்து காணப்படும்.

இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் என 3 வகைப்படும். இதன் கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும் பயன் தரக்கூடியது. மஞ்சள் நிற மலர்களைக் கொண்டது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன.

இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும். நடைபாதை ஓரங்கள் முளைத்திருக்கும். நெருஞ்சியின் முள்ளானது செருப்பில்லாமல் நடக்கும் போது நறுக்கென்று குத்தி வலி ஏற்படுத்துமே தவிர, முள் ஆழமாக காலில் இறங்காது.

நெருஞ்சி முள் பயன்கள்

ஆண்மைக்குறைபாட்டைப் போக்கும். நெருஞ்சி முள் கசாயத்தை குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும். ஆண் இனப்பெருக்க உறுப்புக்களை வளர்ப்பதற்கும் தாம்பத்திய வாழ்க்கை ஆரோக்கியமாக்கவும் நெருஞ்சிமுள் பயன்படுகிறது.

நெருஞ்சி முள்ளை கால் கிலோ அளவு வாங்கி பசும் பாலில் வேகவைத்து, எடுத்து உலர்த்தி நன்றாக காய்ந்ததும் பொடி செய்து வைத்து ஆண்களுக்கு தினமும் ஒரு டம்ளர் பாலில் இரண்டு கிராம் வீதம் கலந்து கொடுத்துவந்தால் ஆண்மை பெருகும்.

நெருஞ்சி முள் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை சரியாகப் பேண உதவுகின்றது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றது. கொழுப்பை குறைக்கும் தன்மை அதிகம் உள்ளதால் மாரடைப்பை தடுக்கின்றது.

சிறுநீருடன் இரத்தம் போகுதலைத் தடுக்க உதவும். நெருஞ்சி முள் 30 மில்லி லிட்டர் எடுத்து அதனை பாலுடன் கலந்து குடித்து வந்தால் சிறுநீருடன் இரத்தம் போகுதல் கட்டுப்படும்.

நெருஞ்சி முள் தோல் கடிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.

கல்லடைப்பை குணமாக்கும். நெருஞ்சில் விதையை பாலில் அவித்து பிறகு காயவைத்த பொடியாக்கி இளநீரில் கலந்து சாப்பிட்டு வர கல்லடைப்பு, நீறுநீர்கட்டு ஆகியவை குணமாகும்.

சிறுநீரக பிரச்சனைகளைக் குறைக்க உதவுகின்றது. நெருஞ்சி முள் 25 கிராம், தனியா 5 கிராம் இரண்டையும் அரைலிட்டர் தண்ணீரில் சேர்த்து அவை பாதி டம்ளராக வரும் வரை சுண்டக்காய்ச்சி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் கால் டம்ளர் அளவு குடித்துவர சொட்டு சொட்டாக பிரியும் சிறுநீர் குணமாகும்.

பெண்களின் கர்ப்பப்பைப் பாதையில் உண்டாகும் அழற்சிக்கும் நெருஞ்சி முள் உதவும். நெருஞ்சி முள் மற்றும் நெருஞ்சி வேர் ஒரு பங்குக்கு இரண்டு பங்கு பச்சரிசி சேர்த்து வேகவைத்து வடிகட்டி கஞ்சியாக்கித் தினமும் ஒரு டம்ளர் வீதம் 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கண் எரிச்சல், கண்களில் உஷ்ணம், கண் சூடு, கண் சிவப்பு , கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளத் தடுப்பதற்கும் பயன்படுகின்றது.

You May Also Like :
அக்குள் கருமை நீங்க
ஆடாதோடை பயன்கள்